கோவை, ஜூலை 31- சூயஸ் நிறுவனத்தின் நிபந்தனை களுக்கு அடிபணிந்து பொதுக்குழாய் களை அகற்ற மாட்டோம் என்கிற உறுதியை மாமன்றத்திலேயே கோவை மாநகராட்சி ஆணையர் வழங்க வேண்டும் என சிபிஎம் கவுன் சிலர்கள் கிடுக்குப்பிடி போட்டு உறுதி மொழியை பெற்றனர். கோவை மாநகராட்சி விக் டோரியா அரங்கில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மாந கராட்சி கூட்டம் திங்களன்று நடை பெற்றது. துணை மேயர் வெற்றி செல்வன், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் ஆகியோர் இக்கூட்டத் திற்கு முன்னிலை வகித்தனர். மாந கராட்சி கூட்டத்தில் 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத் தில், பல்வேறு தீர்மானங்கள் விவா திக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இவற்றில் பொருள் எண்:39ல் கொண்டு வரப்பட்ட தீர்மானமான திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளுக்கு மாநகராட்சி சார்பில் அவுட்டோர் சிங் என்ற பெயரில் ரூ.170 கோடியே 65 லட்சத்து 61 ஆயி ரம் ரூபாயில் ஓராண்டுக்கான திடக் கழிவுகளை சேகரித்தல் மற்றும் மறு சுழற்சி செய்தல் பணிகள் என்ற பெய ரில் தனியாரிடம் ஒப்படைப்பதற்கு மாநகராட்சியில் சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் இடதுசாரி கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளிப் படுத்தினர். குறிப்பிட்ட தீர்மானமா னது அரசின் கொள்கை முடிவு என மாநகராட்சி தரப்பில் தெரிவித்த போதிலும் மாமன்றத்தில் மார்க் சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக ஆகிய கட்சிகள் இத் திட்டத்திற்கு மாமன்ற கூட்டத்தில் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்தனர். முன்னதாக, மாமன்ற கூட்டம் துவங்குவதற்கு முன்பு மாநகராட்சி யின் பிரதான நுழைவாயிலில், நூற் றுக்கணக்கான மார்க்சிஸ்ட் கட்சி யினர் சூயஸ் நிறுவனத்தின் நிபந்த னைகளை ஏற்கும் மாநகராட்சியை கண்டித்து முற்றுகை போராட்டத் தில் ஈடுபட்டனர்.
இது மாமன்றத்தி லும் எதிரொலித்தது, சூயஸ் நிறுவ னத்தின் நிபந்தனை ஏற்று பொதுக் குழாய்களை அகற்றுவது உள்ளிட்ட பிரச்சனைகளை மார்க்சிஸ்ட் கட்சி யின் மாமன்ற உறுப்பினர்கள் கேள்வி கடும் எதிர்ப்பை தெரிவித்த னர். இதில், சிபிஎம் மாமன்ற உறுப்பி னர் வி.இராமமூர்த்தி பேசுகையில், கோவை மாநகரத்தின் குடிநீர் விநி யோக உரிமையை பன்னாட்டு பிரான்சு நாட்டின் சூயஸ் நிறுவனத் திற்கு ஒப்பந்தம் வழங்கியதை, ஆளும் கட்சியாக உள்ள திமுக, இடதுசாரிகள் உள்ளிட்டு கடுமை யாக எதிர்த்து வருகிறோம். இப் போது, பொதுக்குழாய்களை அகற் றுவது, வைப்புத்தொகையை கடு மையாக அதிகரித்திருப்பது போன் றவற்றை ஒருபோதும் ஏற்க முடி யாது. பொதுக்குழாய்களை அகற்ற மாட்டோம் என்கிற உறுதியை மாநக ராட்சி ஆணையர் இந்த மாமன்றத் திலேயே உறுதி அளிக்க வேண்டும், என்றார். இவருடன் இணைந்து இதர கவுன்சிலர்களும் கிடுக்குப்பிடி போட் டனர். இதனையடுத்து, வசதி வாய்ப் புகள் இல்லாத ஏழை எளிய மக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்புகளில் உள்ள பொதுக்குழாய்கள் அகற் றப்படாது எனவும், வைப்புத்தொகை விவகாரத்தில் 500 சதுர அடிக்கும் குறைவான வீடுகளுக்கு ரூ 250 வைப்புத்தொகை பெற வேண்டும் என்கிற கோரிக்கையும் ஏற்பதாக தெரிவித்தார்.