தருமபுரி, பிப்.23- பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி தமிழ் நாடு வணிகவரி பணியாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி வணிகவரி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துணை மாநில வரி அலுவலர் பதவி உயர்வு தொடர்பான கோப்பினை தனியாக பராமரித்து உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும். பிப்ரவரி, மார்ச் மாதங் களில் ஆய்வு கூட்டங்களை தவிர்த்து களப் பணி ஆற்றிட கள அலுவலர்களுக்கு அவ காசம் வழங்க வேண்டும். காதித்துறை ஊழியர்களுக்கான சிறப்பு நிலை ஊதிய பிடித்த பிரச்சனையில் நல்லெண்ண அடிப்படையில் தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும். 2021ஆம் ஆண்டு நவம்பரில் கோட்ட மாறுதல் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் தாய் கோட்டத்திற்கு கோட்ட மாறு தல் வழங்கிட வேண்டும். இரவுக் காவலர், அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர் ஆகிய காலிப்பணியிடங்கள் கால முறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன் வைக்கப்பட்டது. வணிகவரி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் குமார் ஆர்ப்பாட்டத்திற்கு தலை மை ஏற்றார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பழனியம் மாள்,மாவட்ட செயலாளர் ஏ.சேகர், வட்ட செயலாளர் குமரன் ஆகியோர் கோரிக்கை கள் குறித்து உரையாற்றினர்.