districts

img

ஒன்றிய அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் உச்ச நீதிமன்றம் குட்டு

கோவை, மே 18-  பேரறிவாளனை விடுதலை செய்து ஒன்றிய அரசுக்கும், மாநில ஆளுநருக் கும் உச்ச நீதிமன்றம் குட்டு வைத்துள் ளதாக கு.ராமகிருட்டிணன் தெரிவித் தார். பேரறிவாளன் விடுதலையை வர வேற்று, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார்படிப்பகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தி னர் பட்டாசுகள் வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதுகுறித்து தந்தை  பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டி ணன் கூறுகையில், 31 ஆண்டுகளுக் கும் மேலாகசிறையில் உள்ள பேர றிவாளனை விடுதலை செய்ய வேண்டு மென பல்வேறு தரப்பினரும் போராட் டங்களில் ஈடுபட்டனர். ஆனால், பேரறி வாளன் விடுதலைக்கு உச்ச நீதிமன்றத் தில் ஒன்றிய அரசும், மாநில ஆளுநரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த னர். இதனை ஏற்றுக் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது மகிழ்ச்சி யளிக்கிறது. இந்த தீர்ப்பின் மூலம் பேர  றிவாளன் மட்டும் விடுதலை ஆக வில்லை, மாநில உரிமைகளும் விடு தலை பெற்றுள்ளது. பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒன்றிய அரசுக்கும், மாநில ஆளுநருக் கும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் கொட்டு வைத்துள்ளது. இத்தீர்ப்பி னால் நாடு முழுவதும் பல ஆண்டுக ளாக சிறையில் உள்ளவர்கள் விடு தலை செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.