திருப்பூர், ஜன.12- திருப்பூர் மாவட்ட அளவில் தேசிய குழந்தைகள் அறிவி யில் மாநாட்டில் பங்கு பெற்ற வழிகாட்டி ஆசிரியர்கள் மற்றும் மதிப்பீட்டாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்வு காங்கயம் ரோட்டில் உள்ள பெம் ஸ்கூல் ஆப் எக்ஸ்லென்ஸ் பிளே ஸ்கூலில் புதன்கிழமை அன்று மதியம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு குழந்தை கள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ. ஈசுவரன் தலைமை தாங்கினார். அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் கெளரி சங்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் தலைவர் பேராசிரியர் மோகனா சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் மாவட்ட தலைவர் பேராசிரியர் முனைவர் நஜீரா, ஆசிரியர் கார்த்தி வாழ்த்தி பேசினர். கல்வி ஒருங்கிணைப் பாளர் சவீதா நன்றி கூறினார்.