கோவை, அக்.21- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையிலிருந்து வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்.24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கோவையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்து வரும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு தங்களது சொந்த ஊா்களுக்கு செல் வார்கள். அப்பயணிகளின் வசதியாக அக்.21 ஆம் தேதி முதல் அக்.23 ஆம் தேதி வரை கோவையிலிருந்து மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மதுரைக்கு 100, தேனிக்கு 40, பஸ்களும், திருச்சிக்கு 50, சேலத்துக்கு 50 என மொத்தம் 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. போக்கு வரத்து மற்றும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்து பல்வேறு பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப் படுகிறது. போக்குவரத்து நெரிசலை தடுக்க கொடிசியாவில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். ஆனால், இந்த ஆண்டில் சிறப்பு பேருந்துகள் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் சூலூர் பேருந்து நிலையங் களில் இருந்து இயக்கப்படுகிறது. இதில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தேனி உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும், சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து கரூர், திருச்சிக்கும், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி வழியாக செல்லும் பேருந்துகளும், மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள புதிய பேருந்து நிலை யத்திலிருந்து உதகை, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள் எளிதில் செல்வதற்காக காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் பேருந்து நிலையங் களின் தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிப்பு பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.