districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நாமக்கல்: கூட்டு குடிநீர் விநியோக திட்ட மறுசீரமைப்பு பணிகள் துவக்கம்

நாமக்கல், நவ.7- நாமக்கல், ஆட்டோ நகர் மற்றும் மோக னூர், நாமக்கல் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 31 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் விநியோக திட்ட மறுசீரமைப்பு பணி களை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். என்.ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார். நாமக்கல், ஆட்டோ நகர் மற்றும் மோக னூர், நாமக்கல் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 31 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு  குடிநீர் திட்டம் காவிரி ஆற்றை நீர் ஆதார மாக கொண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 1998 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் மோக னூர் வட்டம், குமாரபாளையம் காவிரி  ஆற்று பகுதியில் 2 கிணறுகள் அமைக்கப் பட்டு, 12 மின் மோட்டர்களால் 8.44 கி.மீ  தூரத் திற்கு கல்நார் குழாய் மூலமாக நீர் கொண்டு செல்லப்பட்டு, 4 ஆயிரத்து 200 வீடுகளை சேரந்த 27 ஆயிரத்து 445 நபர்களுக்கு குடி நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு, நபர் ஒன்றுக்கு 40 லிட்டர் வீதம் குடிநீர் விநியோ கிக்கப்பட்டு வருகின்றது. தற்போது ஜல்  ஜீவன் மிஷன் திட்டத்தின் வழிகாட்டுதலின் படி, நாமக்கல், ஆட்டோ நகர் மற்றும் மோக னூர், நாமக்கல் ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 31 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நாளொன்றுக்கு, நபர் ஒன்றுக்கான குடிநீர் 55 லிட்டராக அதிகப்படுத்தி  வழங்கப்பட வுள்ளது. இதற்காக மோகனூர் வட்டம், குமாரபாளையத்தில் கூடுதலாக 1 நீர் உறிஞ்சி கிணறு அமைக்கவும், 12 மின் மோட்டர்கள் புதியதாக நிறுவவும், தற்போது உள்ள கல் நார் குழாய்களுக்கு பதிலாக 8.44 கி.மீட்டர் நீளத்திற்கு புதியதாக இரும்பு குழாய் (DI  Pipe) பதிக்கவும் ரூ.4.19 கோடியில் தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரிய நாமக்கல் பரா மரிப்பு கோட்டம் மூலமாக மறுசீரமைப்பு பணி கள் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணி கள் 05.07.2023க்குள் முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்ட மிடப்பட்டுள்ளது.

மாணவிக்கு பாலியல் பலாத்காரம் குண்டர் சட்டத்தில் வழக்கு

உதகை, நவ.7- உதகையில் 14 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நர்சரி உரிமையாளர் மீது குண்டர் சட்டத் தில் வழக்கு பதிவு செய்தனர்.  நீலகிரி மாவட்டம், உதகை அருகே 9 ஆம் வகுப்பு படிக் கும் 14 வயது பள்ளி மாணவியை, தனியார் நர்சரி உரிமை யாளரான சேகர் என்பவர், பல்வேறு இடங்களுக்கு அழைத் துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலை யில், மாணவியின் உடல் நிலை மற்றும் நடத்தையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த பெற்றோர் மாண வியை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அதில் பள்ளி மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சிய டைந்த பெற்றோர் இதுகுறித்து உதகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் சேகர்  மாணவிக்கு 2 வருடங்களுக்கும் மேலாக பாலியல் தொந்தரவு கொடுத்ததும், இதுகுறித்து வெளியில் எதுவும் சொல்லக் கூடாது என்று மிரட்டி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து உதகை அனைத்து மகளிர் காவல்  நிலைய ஆய்வாளர் சரஸ்வதி தலைமையிலான போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர். இதையடுத்து சேகரை உதகை மகிளா நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி உதகை கிளை சிறையில் அடைத்த னர். இதனைத்தொடர்ந்து நர்சரி உரிமையாளரான சேகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்துக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து ஆட்சியர் அம்ரித் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய  உத்தரவிட்டார். இதையடுத்து கோவை மத்திய சிறையில் உள்ள சேகரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தற்கான நகல் வழங்கப்பட்டது.

“மாமனிதன் வைகோ” ஆவணப்படம் வெளியீடு

ஈரோடு, நவ.7- “மாமனிதன் வைகோ” ஆவணப்படம் வெளியீட்டு விழா  ஈரோடு ஆனூர் திரையரங்கத்தில் திங்களன்று நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தலைமை வகித்தார். மதிமுக மாவட்ட செய லாளர் நா.முருகன் வரவேற்றார். ஆவண பட இயக்குநரும்,  தயாரிப்பாளருமான தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஏற்புரையாற்றினார். வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, இ.வி.கெ.எஸ்.இளங்கோவன் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வே.ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை

கோவை, நவ.7- படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், சிவகங்கைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்தவர் பிராங்க்ளின் ஆரோன் (25). பொறியியல் பட்டதாரியான இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் வேலை தேடி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவை  வந்தார். சித்தாபுதூர் தனலட்சுமி நகரில் உள்ள தங்கும் விடுதி யில் அறை எடுத்து தங்கி தனியார் உணவு டெலிவரி நிறுவ னத்தில் வேலைக்கு சேர்ந்தார். இந்த வேலை அவருக்கு பிடிக்கவில்லை. மேலும், படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கா ததால், மிகுந்த மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் தனது அறையில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். பட்டதாரி இளைஞர் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் பந்தையசாலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  காவல் துறையினர், வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சோலார் பேருந்து நிலையம் 

ஈரோடு, நவ. 7- ஈரோட்டில் நவம்பர் இறுதியில் சோலார் பேருந்து நிலை யம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.  ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட சோலாரில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தற்காலிக பேருந்து நிலை யத்துக்கு தினமும் 156 பேருந்துகள் 298 முறை வந்து செல்ல  உள்ளன. தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, தூத்துக் குடி மற்றும் கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் முழுமையாக தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளன.  இந்த பேருந்து நிலையத்தில் பயணிகளுக்குத் தேவை யான குடிநீர், நடைபாதை மற்றும் இருக்கைகள் அமைக்கும் பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. இப்பணிகளை தீவி ரப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நிலு வைப் பணிகளை முடித்து இன்னும் 2 வாரங்களில் பேருந்து  நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாநக ராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குடும்பத்தினரை சேர்த்து வைக்ககோரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம்

இளம்பிள்ளை, நவ.7- குடும்பத் தகராறு பிரச்சனை கார ணமாக பிரிந்துள்ள மனைவியும், குழந் தையும் தன்னுடன் சேர்த்து வைக்க கோரி 200 அடி உயரம் கொண்ட செல் போன் டவர் மீது ஏறி இளைஞர் ஒருவர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்தி ரம் அருகே உள்ள கருமாபுரம் பகுதி  யைச் சேர்ந்தவர் அமிதாபச்சன். இவ ருக்கும் நாமக்கல் பகுதியை சேர்ந்த பார்வதி என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ரோகித் என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலை யில் மதுப்பிரியரான அமிதாப்பச்சன் தொடர்ந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் பார்வதி திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத் தில் புகார் கொடுத்து தான் கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என தனது குழந்தையை எடுத்துக்கொண்டு அவரது தாயார் வீட்டுக்கு சென்று சென்றுள்ளார். இதனையறிந்த அமிதாப்பச்சன் நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செனறு தன்னுடன் மனைவியையும், குழந்தையும் சேர்த்து வைக்க கோரிக்கை வைத்துள்ளார். போலீசார் இருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் பார்வதி கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என  தெரிவித்து சென்றுள்ளார்.  இந்நிலை யில் சம்பவத்தன்று சங்ககிரி பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த அமிதாப்பச்சன் சங்ககிரி அருகே உள்ள கொங்கு நகர்  பகுதியில் 200அடி உயரம் கொண்ட தனி யார் செல்போன் டவர் மீது ஏரி அமர்ந்து  கொண்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் மல்ல சமுத்திரம் போலீசாருக்கு தகவல் அளித் துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீ சார் சேலம் மாவட்டம், சங்ககிரி போலீசா ருக்கு தகவல் அளித்ததின் பேரில் போலீ சார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல் போன் டவர் மீது இருந்த அமிதாப் பச்சனிடம் செல்போனில் பேசி சமரசம் செய்ய முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத  அமிதாப்பச்சன் தனது மனைவி பார்வதி யும்  குழந்தை ரோகித்தையும் அழைத்து  வந்து காண்பித்தால் மட்டுமே தரை யிறங்குவேன் என கூறியுள்ளார். சங்க கிரி போலீசார் அமிதாப்பச்சனின் தாயாரை வரவழைத்து  தரை இறங்க  முயற்சி செய்தனர். அந்த முயற்சியும் தோற்றது.  இதனையடுத்து  நாமக்கல் அருகே முத்தம்பட்டி கிராமத்தில் இருந்த அவ ரது மனைவி பார்வதி மற்றும் குழந்தை ரோகித் ஆகியோரை சங்ககிரி போலீ சார் அழைத்து வந்தனர். இதனைய டுத்து அமிதாப்பச்சன் 6 மணி நேரத்திற்கு பின் இறங்கி வந்தார்.

ரேசன் அரிசி கடத்தல்- கைது

கோவை, நவ.6- கோவையில் மினி வேனில் ரேசன் அரிசி கடத்தியவர் களை குடிமை பொருள் அதிகாரிகள் கைது செய்து, அரிசியை பறிமுதல் செய்தனர்.    தமிழக- கேரள எல்லை பகுதிகளில் சோதனை சாவடிகள் மூலம் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர். தொடர் அரிசி கடத்தல் நடைபெறுவ தால், இதனை தடுக்க கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக குடிமை பொருள் வழங்கல் போலீசார் வாகன சோதனை ஈடு பட்டு வருகின்றனர். இதில், இருசக்கர வாகனம் மற்றும்  கார்,  மினி வேன், லாரிகளில் கடத்தப்படும் ரேசன் அரிசி மூட்டை களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக,   கேரள எல்லைப்பகுதியான பொள் ளாச்சியை அடுத்த கோபாலபுரம், செமனாம்பதி, மீனாட்சி புரம், வேலந்தாவளம், வாளையார் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சம்பவத்தன்று அதிகாலை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை இயக்குநர் அபாஷ் குமார் உத்தரவுப்படி, கோவை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில், காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையில், பொள் ளாச்சி ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் உதவி ஆய்வாளர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் கோவை அருகே பாலக்காடு ரோட்டில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த  வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தலா 50 கிலோ எடை கொண்ட 100 மூட்டைகளில் மொத்தம் 5 டன் ரேசன் அரிசி இருந்தது. ரேசன் அரிசி கடத்த லில் ஈடுபட்ட குனியமுத்தூரை சேர்ந்த வல்லரசு (23), குறிச் சியை சேர்ந்த செந்தில்நாதன் (36) ஆகியோரை கைது செய்த னர். அவர்களிடம் இருந்து வாகனம் மற்றும் அரிசியை பறி முதல் செய்தனர்.

கடந்த 10 மாதங்களில் 874 கிலோ கஞ்சா பறிமுதல்: 51 பேர் கைது

சேலம், நவ.7- சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 10 மாதங்களில் ரயிலில் கடத் திய 874 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இதுதொடர்பாக இது வரை 51 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். தமிழகத்தில் கஞ்சா, குட்கா  உள்ளிட்ட புகையிலை பொருட் களை விற்பனை செய்ய தடை விதிக் கப்பட்டுள்ளது. ஆனால், ஆந்திரா,  ஒடிசா, கர்நாடகா, மராட்டியம் உள் ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து சிலர் புகையிலை பொருட்களை ரயி லில் கடத்தி, தமிழகத்தில் ரகசியமாக விற்பனை செய்து வருகின்றனர்.  இதனால் கஞ்சா, புகையிலை பொருட் களை கடத்தி செல்லும் நபர்களை யும், அதை விற்பனை செய்யும் நபர் களையும் கண்டறிந்து கடும் நடவ டிக்கை எடுக்க ரயில்வே போலீஸ்  உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள் ளனர். அதன்படி, மாநில எல்லைப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து, கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தலை போலீசார் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக சேலம் ரயில்வே உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம், தருமபுரி, ஓசூர், ஜோலார் பேட்டை, காட்பாடி ஆகிய 5 ரயில்வே போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரயில்வே தனிப்படை  போலீசார் தினமும் ஆந்திராவிலி ருந்து வரும் ரயில்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில்,  கடந்த 10 மாதங்களில் மட்டும் ரயிலில் கஞ்சா கடத்தி வரப்பட்டதாக 108 வழக் குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 874 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீ சார் பறிமுதல் செய்துள்ளனர். இதில், பீகார், ஒடிசா, மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் உட்பட இதுவரை 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய 57 பேரை ரயில்வே போலீசார் தொடர்ந்து தேடி வரு கின்றனர். சேலம் உட்கோட்டத்தில் மிக  அதிகபட்சமாக சேலம் ரயில்வே  போலீசில் மட்டும் 57 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு, 410 கிலோ கஞ்சா பறி முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த  வழக்குகளில் 27 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறை வாக உள்ள 30 பேரை தேடி வரு கின்றனர். இதற்கு அடுத்த இடத்தில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீ சில் 30 கஞ்சா வழக்குப்பதிவு செய்து  242 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இதேபோல் காட்பாடி ரயில்வே போலீசில் 21 வழக்குகளில் 222 கிலோ கஞ்சா பறிமுதல் செய் யப்பட்டுள்ளது. இதுவரை 11 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். தலை மறைவாக உள்ள 10 பேரை தேடி வரு வதாக ரயில்வே போலீசார் தெரி வித்தனர்.

சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு

கோவை, நவ. 7 – கோவை மாநகராட்சிக் குட்பட்ட 32 வார்டுகளுக்கும், வழியோரங்களில் உள்ள  ஏராளமான கிராமங்களுக் கும் சிறுவாணி அணையில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிறு வாணி அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடி நீர் தேவைக்காக எடுக்கப் படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து  வருவதால் அணைகள், குளங் களுக்கு தண்ணீர் வரத்து  அதிகரித்து உள்ளது.  சிறு வாணி அணையின் நீர்மட்டம் மழை காரணமாக 40.08 அடி யாக உயர்ந்துள்ளது.

களிமண் பொருள்கள் தாயாரிப்பு பயிற்சி

அவிநாசி, நவ.7- அவிநாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்க ளுக்கு காகித வடிவமைப்பு மற்றும் களிமண் பொருள்கள் தாயாரிப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. அவிநாசி நல்லது நண்பர்கள் அறக்கட்டளை,  சென்னை  எழிலன் நண்பர்கள் மற்றும் களிமண் விரல்கள் கூட்டமைப்பு,  நிலாப்பள்ளி அமைப்பு ஆகியவை சார்பில் கலை பழகுதல்  முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.  இதில் காகித பூ, கப்பல்,  பல்வேறு வகையான தொப்பிகள், மயில், கொக்கு டம்ளர் (கப்பு) உள்ளிட்ட காகித வடிவமைப்பு, ஓவியங்கள் வரைதல்,  களி மண்ணால் உருவாக்கப்படும் பொம்மைகள், பொருள் கள் எளிய முறையில் தாயாரித்தல்  உள்ளிட்ட பயிற்சிகள் வழங் கப்பட்டது. இதைத்தொடர்ந்து நினைவாற்றல், உருவாக்கும்  திறன், மனதை ஒரு நிலைப்படுத்தல் குறித்து பயிற்சிய ளிக்கப்பட்டது.  இம்முகாமில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங் கேற்றனர்.

ரூ. 1 கோடிக்கு பருத்தி ஏலம்

தாராபுரம், நவ - 7 மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ. 1 கோடிக்கு பருத்தி ஏலம் போனது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மூலனூர் ஒழுங் குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக  ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கருர், திருச்சி, திண்டுக் கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 430 விவசாயி கள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அதேபோல் பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண் டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 9 ஆயிரத்து 636க்கும்,  குறைந்தபட்ச விலையாக ரூ. 6 ஆயிரத்து 850 க்கும் சராசரி  விலையாக ரூ. 8 ஆயிரத்து 450 க்கும் விலை போனது.  மொத்தம் 4104 மூட்டைகள் 1 ஆயிரத்து 326 குவிண்டால் பருத்தி  ரூ. 1 கோடியே 6 லட்சத்து 12 ஆயிரத்து 400 க்கு விற்பனை யானது. இந்த ஏலத்தில் 13 வணிகர்கள் பங்கேற்றனர். ஏலத்திற் கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்தி ருந்தார்.

ரூ.30 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, நவ.7 சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த  வாரம் நடைபெற்ற ஏலத்தில், 900 மூட்டைகள் வந்திருந்தன.குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,800  முதல் ரூ.8,100 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ. 7,200 முதல் ரூ.7,450 வரையிலும், மூன்றாவது ரக நிலக் கடலை ரூ.6,700 முதல் ரூ.6,900 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.30 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 8 வியா பாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

விவசாயிகளுக்கு தரமான விதைகளை விற்பனை செய்யவேண்டும் மீறினால் கடும் நடவடிக்கை: விதை ஆய்வு துணை இயக்குநர்

தாராபுரம், நவ. 7- விவசாயிகளுக்கு தரமான விதைகள் விற் பனை செய்யவேண்டும் மற்றும் விதை சட் டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும்  மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. திருப்பூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் மு.ஜெயராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது,  தாராபுரம் வட்டார பகுதிகளில் 138 விதை  விற்பனை நிலையங்கள் உள்ளது. அதில்  50க்கும் மேற்பட்ட நெல் விதை உற்பத்தி நிலை யங்கள் உள்ளது. அரசுத் துறைகளான வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடைத்துறை, தமிழ்நாடு வேளாண்மையல்கலைக்கழகம் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் அரசு சார்புத் துறைகளான வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் கூட்டுறவு விற்ப னைமையங்கள், மற்றும் விதை விற்பனை உரிமம் பெற்று விதை விற்பனை செய்யும் தனி யார் விற்பனை மையங்கள் மூலமாக விவசா யிகளுக்கு தேவையான விதைகள விற்பனை  செய்யப்பட்டு வருகிறது. தாராபுரம் வட்டா ரத்தில் தற்போது நெல், மக்காசோளம், பருத்தி மற்றும் பயறு வகைகள் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விதை குவியலுக்கும், குவியல் வாரி யாக விதை இருப்பு  பதிவேட்டில் இருப்பு  வைத்து, முளைப்புத்திறன் பரிசோதனை செய்த முடிவு அறிக்கை மற்றும் பதிவுச்சான் றிதழ் கண்டிப்பாக ஒவ்வொரு விதை  விற்பனையாளரும் கடையில் வைத்திருக்க வேண்டும். விதை விற்பனையாளர் கொள்மு தல் செய்த விதைகளை பாதுகாப்பாகவும், முறையாக விதை விற்பனை உரிமம் பெற்ற  இடத்தில் வைத்திருக்க வேண்டும். மேலும்  விதை இருப்பு பதிவேடு, விதை இருப்பு  மற்றும் விலை விபரப்பலகை தினந்தோறும்  பதிவு செய்ய வேண்டும், கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல் மற்றும் பிற  ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். விதைகள் விற்பனை செய்யும் போது விற்பனை பட்டியல் கட்டாயம் விவசா யிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அதில் பயிர், இரகம், விதைக்குவியல் எண், காலா வதி நாள் குறிப்பிட வேண்டும். விற்பனை பட் டியலில் விவசாயிகளின் கையொப்பம் பெறப்பட வேண்டும். மேற்கண்ட விதி முறை களை மீறுவோர் மீது விதைச் சட்டம் 1966  மற்றும் விதை விதிகள்1968 மற்றும் விதை  (கட்டுப்பாடு) ஆணை 1983 ஆகிய சட்டத் தின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

வழிபாட்டு உரிமை மறுப்பதா?  ஆட்சியரகம் முன்பு கிறிஸ்தவர்கள் போராட்டம்

திருப்பூர், நவ. 7 - திருப்பூரில் சொந்த இடத்தில் திருச் சபை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அனுமதி மறுப்பதைக் கண் டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் கிறிஸ்தவ மக்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைககும் போராட்டத்தில் ஈடுபட்ட னர். திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்தவர் அருண் அந்தோணி. இவர்  கிறிஸ்தவ சபை போதகராக செயல் பட்டு வருகிறார். இவர் அதே பகுதி யில் பெத்தேல் ஏ.ஜி.சபை என்ற திருச்ச பையை நடத்தி வருகிறார். இந்நிலை யில் சபைக்கு சொந்த கட்டிடம் கட்டு வதற்காக கடந்த 2021-ஆம் ஆண்டு ஊத் துக்குளி ரோடு சர்க்கார் பெரியபாளை யம் பகுதியில் இடம் வாங்கி இருக்கி றார். அங்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகளை தொடங்கியபோது, ஒரு சிலர்  சபை கட்டுமான பணி நடந்த இடத் திற்குள் அத்துமீறி நுழைந்து,

கட்டு மான பணிகளை தடுத்தனர். அத்துடன்,  அந்த இடத்துக்கு அருகில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விநாயகர் சிலையை வைத்தனர்.  இதையடுத்து இது தொடர்பாக போதகர் அருண் அந்தோணி போலீஸ்  நிலையத்தில் புகார் தெரிவித்தார். மேலும் சபை கட்டுவதற்கு அனுமதி கோரி கடந்த பல மாதங்களாக மாவட்ட  ஆட்சியரையும், வருவாய் துறை அதிகா ரிகளையும் சந்தித்து மனு கொடுத்து வந் தார். இந்த நிலையில் சொந்த இடத்தில்  திருச்சபை கட்ட தொடர்ந்து அனுமதி  மறுப்பதை கண்டித்தும், கிறிஸ்தவர் களின் உரிமைகளை பறிக்கும் வகை யில் செயல்படும் அதிகாரிகளின் செயல் பாடுகளைக் கண்டித்தும் பெத்தேல் ஏ.ஜி. சபை போதகர் அருண் அந்தோணி  தலைமையில் சபை மக்கள் 50-க்கும்  மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சி யரகத்தில் திங்களன்று வாராந்திர மக் கள் குறை தீர் முகாமுக்கு வந்தனர். அங்கு அவர்களுடன், அனைத்து கிறிஸ் தவ சபை போதகர்களும் சேர்ந்து நீதி  வழங்கக் கோரி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ சபைகள் கட்டுவதற்கு அனு மதி மறுக்கப்படுவதையும், சிறு பான்மை மக்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதையும் தமி ழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகை யில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை,  வாக்காளர் அடையாள அட்டை உள் ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட் டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். இத னால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்  துறையினர் அவர்களிடம் சமாதனம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அவிநாசி, நவ.7- தமிழ்நாடு மின்சார வாரியம், அவிநாசி மின் கோட்டசெயற் பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை நவ. 9 ஆம் தேதி  காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடைபெறுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்  பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் கலந்து  கொண்டு மின் நுகர்வோர் குறைகளை நேரில் கேட்டறிந்து  நிவர்த்தி செய்கிறார்.

கோவையில் பாடகர் சித் ஸ்ரீராமின் கச்சேரி

கோவை, நவ.7- அன்னபூர்ணா மசாலா நிறுவத்தின் சார்பில் பிரபல  திரைப்பட பின்னணி பாடகர் சித் ஸ்ரீராமின்  இசைக்கச்சேரி நவ.27 ஆம் தேதியன்று கோவை கொடிசியா மைதானத் தில் நடைபெறவுள்ளது. மாலை 6 மணி அளவில் துவங்கும் இந்த கச்சேரி சுமார் 3 மணி நேரம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். ஒளி மற்றும் ஒலி ஆகியவற்றின் தரம்  சர்வதேச நிகழ்வுகளுக்கு சமமானதாக இருக்க வெளிநாட்டி லிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடியோ சிஸ்டம், லைட் சிஸ்டம் இந்த கச்சேரியில் உபயோகிக்கப்பட உள்ளது. இம் முறை மேடை அருகே ரசிகர்கள் நின்று பாடி, ஆடும் ‘பேன் பிட்’  இடம் பெறுகிறது. இந்த இசை கச்சேரி நிகழ்வு குறித்து சித் ஸ்ரீராம் பேசிய “ப்ரோமோ வீடியோ” வெளியீடு அவிநாசி சாலையிலுள்ள தனியார் விடுதியில் சனியன்று நடை பெற்றது. இந்த கச்சேரிக்கான நுழைவுச்சீட்டுகள் பே டிஎம், இன் சைடர், புக் மை சோ (PAYTM INSIDER, BOOK MY SHOW) ரோட்டரி கேலக்ஸ்சி சங்கத்தில் கிடைக்கும். மேலும், நிகழ்வு  நடைபெறும் கொடிசியா வளாகத்திலும் நுழைவுசீட்டு கவுண்டர்கள் இடம்பெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் ரூ.90 லட்சம் மதிப்பிலான தவறவிட்ட, திருடுபோன செல்போன்கள் மீட்பு

கோவை, நவ.7- கோவை மாவட்டத்தில் தவறவிட்ட மற்றும் திருடுபோன செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு சனியன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பத்ரி நாராயணன் உரியவர்களிடம் செல்போன் களை ஒப்படைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களி டம் பேசுகையில், கோவை மாவட்டத்தில் தவறவிட்ட மற்றும்  திருடுபோன ரூ.23 லட்சம் மதிப்புடைய செல்போன்கள் இன் றைய தினம் (சனியன்று) ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் ரூ.90 லட்சம் மதிப்புடைய செல்போன்கள் மீட் கப்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் கஞ்சா வியா பாரிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். 17 பேருக்கு மறு வாழ்வு தேவை என்ற கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதை பொருள் விற்பனையில் ஈடு பட்ட 12 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள் ளது. இந்த ஆண்டில் ரூ.2.5 கோடி மதிப்பிலான திருட்டு மற் றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 28  பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 25 பேருக்கு குண்டர்  சட்டம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறுமுகை, கிணத்துக் கடவில் கஞ்சா இல்லாத கிராமம் என போர்டு வைக்கப்பட் டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து பொதுமக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து ஈடு பட்டு வந்த 2 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில்  நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள னர். மேலும், நன்னடத்தை பிணையத்தை மீறி குற்ற செயலில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட னர். மாவட்ட காவல் துறை சார்பாக ‘ப்ராஜெக்ட் பள்ளிக் கூடம்” திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப் படும் வன்முறைகள் மற்றும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, மாவட்டத்தில் தற்போது வரை 979 பள்ளிகளில் 2450 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அதன் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோவை நகரில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்ப வத்திற்கு பிறகு புறநகர் பகுதியில் 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 30 பேர் உளவுத்துறை கண்காணிப்பில் உள்ளனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.

மின்தடை

நாமக்கல், நவ.7- நல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதி யில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செவ்வாயன்று (இன்று) நடைபெறுகிறது. இதன் காரணமாக செவ்வா யன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நல்லூர், கந்தம்பாளையம், ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலா ரம், ராமதேவம், நடந்தை, கோதூர், திடுமல், நகப் பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளை யம், குன்னமலை, கவுண்டி பாளையம் உள்ளிட்ட பகுதி களில் மின்சார விநியோகம் தடைபடும் என மின் செயற் பொறியாளர் தெரிவித்துள் ளார்.