திருப்பூர், ஆக.8- திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவ லரும், ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜ் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில், அனைத்து அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன் னிலையில் மாவட்டத்தில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணியை தொடங்கி வைத்தார். இதுகுறித்து ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, தமிழக அரசு முதன்மை செயலர் கடிதத்துடன் வரப்பெற்ற கால அட்டவணையின் படி, திருப்பூர் மாவட்டத்தில் இருப்பிலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்க ளின் முதல் நிலை சரிபார்ப்பு பணியா னது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி யினர் முன்னிலையில் 8 பெல் பொறியா ளர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றது. முதல் நிலை சரி பார்ப்பு பணியின் ஒரு பகுதியாக மின் னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் 5 சதவீதம் (180 இயந்திரங்கள்) மாதிரி வாக்குப்பதிவு செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்கள் நடைபெற உள்ளது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சியினர் முன்னிலையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் தேதி திருப்பூர் மாவட்ட இருப்பு விபரம் 5698 பேலட் யூனிட் இயந் திரங்களும், 3600 கண்ரூல் யூனிட் இயந்திரங்களும், 3876 விவிபிஎடி இயந்திரங்களும் உள்ளது. இந்திய தேர் தல் ஆணைய அறிவுரைப்படி எப்எல்சி ரிஜெக்டெட் இயந்திரங்கள் 7 தினங்க ளுக்குள் பெங்களுர் பெல் நிறுவனத்தி னருக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கிறிஸ்து ராஜ் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட வழங் கல் அலுவலர் த.ரவிசந்திரன் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சியினர் கலந்து கொண்டனர்.