திருப்பூர், மே 3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட முன்னாள் செயற்குழு உறுப்பினரும், பல்லடம் வட்டாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் அடையாளமாகத் திகழ்ந்தவருமான தோழர் ப.கு.சத்தியமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது. பல்லடத்தில் தோழர் ப.கு.சத்தியமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் பேரவைக் கூட்டம் பல்லடம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசிவம் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க நிர்வாகி எஸ்.வெங்கடாச்சலம், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.பஞ்சலிங்கம், விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் பி.முத்துசாமி, கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் சத்தியமூர்த்தியின் பணிகளை நினைவு கூர்ந்து பேசினர். இந்நிகழ்வில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், பல்லடம் கட்சி கமிட்டி உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். திருப்பூரில் நினைவஞ்சலி திருப்பூரில் கட்சியின் மாவட்ட அலுவலகமான தியாகி பழனிசாமி நிலையம் முன்பு நடைபெற்ற நினைவு தின நிகழ்வில் அவரது உருவப்படத்துக்கு கட்சி அணியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் சத்தியமூர்த்தியின் பணிகளை நினைவு கூர்ந்து பேசினர். இதில் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணியன், வடக்கு மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.