districts

img

நாச்சியார்புரத்தில் தியாகி ராமநாதன் நினைவுதினம்

சிவகங்கை ஜூன் 20- சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியம் நாச்சியார்புரத்தை சேர்ந்த  இராமநாதன் அவர்கள் 1950 ஆம்  ஆண்டு மதுரை சிறையில் காவலர் களால் கொடூரமாக தாக்கப்பட்டு வீர  மரணம் அடைந்தார். தியாகி ராமனாதன் நினைவு தின நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா ளர் ஆறுமுகம் தலைமையில் நாச்சி யார்புரத்தில் நடைபெற்றது. தியாகி ராமநாதன் நினைவு செங்கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகன் ஏற்றிவைத்துப் பேசினார்.  அவர் பேசுகையில், இளம் வய திலேயே மிகச் சிறந்த கம்யூ னிஸ்ட்டாக அவர் விளங்கியவர் ராமநாதன். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் ஏழை எளிய மக்க ளுக்காக விவசாயிகளுக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு வாழ்ந்தவர். மூத்த தலைவர் பி.சீனி வாசராவ் அவர்களை அழைத்து வந்து விவசாய சங்க அமைப்பு களை உருவாக்கியவர் என்று தெரி வித்தார். இதில்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேதுராமன், மாவட்டக்குழு உறுப்பினர் முரு கேசன், காரைக்குடி தாலுகா செய லாளர் அழகர்சாமி, சிங்கம்புணரி தாாலூகா செயலாளர் காந்திமதி, சாந்தி ஆகியோர் பேசினர்.