districts

img

தியாகி லீலாவதி நினைவு தினம் அனுசரிப்பு

தருமபுரி, ஏப்.23- சமூக விரோத கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தியாகி லீலா வதியின் நினைவு தினம் செவ்வாயன்று  அனுசரிக்கப்பட்டது. மதுரை மாநகர் வீதியில் சமூக விரோத கும்பலால் படுகொலை செய் யப்பட்ட அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்க தலைவர் தியாகி லீலாவதி யின் நினைவு தினம் செவ்வாயன்று  பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட் டது. அதன்ஒருபகுதியாக தருமபுரி மாவட்டம், செங்கொடிபுரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சார்பில் வைக்கப்பட்டிருந்த அவ ரது உருவப்படத்துக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நி கழ்ச்சிக்கு மாதர் சங்க மாவட்டத் தலை வர் ஏ.ஜெயா தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா, முன்னாள் மாவட்டச் செய லாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்டப் பொருளாளர் வளர்மதி, மாவட்ட நிர் வாகிகள் கே.பூபதி, கே.சுசிலா, மாது,  ஒன்றியத் தலைவர் தமிழ்மணி, செயலா ளர் மீனாட்சி, நகரச் செயலாளர் நிர்மலா  ராணி, தலைவர் சுபா, மார்க்சிஸ்ட் கம்யூ யினிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப் பினர்கள் பி.டில்லிபாபு, ஆர்.சிசுபாலன்,  மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, சிஐடியு மாநிலக்குழு உறுப் பினர் சி.கலாவதி உள்ளிட்டோர் பங் கேற்றனர். திருப்பூர் வீரத்தியாகி லீலாவதி நினைவு தினம் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு  பகுதிகளில் எழுச்சியுடன் கடைப்பிடிக் கப்பட்டது. ஊத்துக்குளி கமிட்டி பாப்பம்பாளை யம் கிளை, பல்லகவுண்டன்பாளையம் கிளை, ஊத்துக்குளி ஆர்.எஸ். கிளை, பெரியபாளையம் கிளை ஆகிய நான்கு  மையங்களிலும் தியாகி லீலாவதியின் உருவப் படத்தை வைத்து மலர் அஞ்சலி  செலுத்தினர்.  அத்துடன் வேலம்பாளையம் கமிட் டியில் அனுப்பர்பாளையம் கிளை, அணைப்பாளையம் கிளை, திருப்பூர் தெற்கு நகரத்திற்கு உட்பட்ட கருவம் பாளையம் கிளை, தெற்கு ஒன்றியம் சிட்கோ கிளை, அவிநாசி கமிட்டி திருமு ருகன்பூண்டி கிளை மற்றும் உடுமலை  கட்சி அலுவலகம் ஆகிய 10 மையங்க ளில் லீலாவதி நினைவு தினம் கடைப் பிடிக்கப்பட்டது.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியினர், அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தினர் பெருந்திரளாக பங்கேற்று தியாகி லீலாவதி பணி களை நினைவு கூர்ந்தனர்.  கோபி ஈரோடு மாவட்டம் கோபி மேட்டுவ லவு கிளையில் மாதர் சங்கத்தின் சார் பில் தியாகி கு.லீலாவதியின்  நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தப்பட்டது. இதில், சங் கத்தின் நிர்வாகி மல்லிகா, தாலுக்கா கட் மிட்டி செயலாளர் துரைசாமி, விதொச  விஆர்.மாணிக்கம் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.