districts

img

கா.மு.காளியப்பன் நினைவேந்தல்

நாமக்கல், அக்.16- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தின் களப்பணியாளரும், நாமக்கல் மாவட்டத்தின் மூத்த தலைவருமான தோழர் கா.மு.காளியப்பன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாமக்கல் பூங்கா  சாலை அருகே நடைப்பெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் நாமக் கல் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜெயமணி இந்நிகழ் விற்கு தலைமை வகித்தார். இதில், கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ்.கந்தசாமி, பிரதேச அமைப்புக்குழு  கன்வீனர் என். வேலுச்சாமி மற்றும் சி.ரங்கசாமி, பி.ராமசாமி, பி.கே.கருப் பன், நகர கிளைச் செயலாளர் வி.பி.கருணாநிதி உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்று மறைந்த தோழர் கா.மு.காளியப்பன் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.