districts

img

தோழர் பழனிச்சாமி நினைவேந்தல்

 அவிநாசி, மே 12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தோழர் பழனிச் சாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வெள்ளி யன்று அவிநாசியில் நடைபெற்றது. அவிநாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியதில் முன் னணியில் நின்றவர்.  கட்சியின், ஒன்றிய குழு உறுப்பினரா கவும், சிஐடியு நிர்வாகியாகவும், சிஐடியு கோவில் பூசாரி கள் சங்கத்தை உருவாக்கியவர் தோழர் பழனிச்சாமி.  தோழர் பழனிச்சாமியின் முதலாம் ஆண்டு நினைவு தினம்  வெள்ளியன்று  அனுசரிக்கப்பட்டது. முன்னதாக, தோழர்  பழனிச்சாமியன் உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியினர்,  உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மலரஞ்சலி செலுத் தினர்.  இதில் கட்சியின் அவிநாசி ஒன்றிய கவுன்சிலர் பி.முத்துச் சாமி, ஒன்றிய செயலாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி, மாவட்டக்  குழு உறுப்பினர் ஆர்.பழனிச்சாமி, கமிட்டி உறுப்பினர்  ஆர்.வேலுச்சாமி, நடுவுச்சேரி கிளைச் செயலாளர் சுப்பிர மணி, கூட்டுறவு வங்கி இயக்குநர் சின்னச்சாமி, நடுவுச் சேரி ஊராட்சி மன்ற உறுப்பினர் ரங்கசாமி ஆகியோர்  கலந்து கொண்டனர்.