districts

img

தோழர் ப.ஆறுமுகம் நினைவேந்தல்

ஈரோடு, ஜுலை 1- ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், காசிபாளையம் பேரூராட்சியில் வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியாற்றிய தோழர் ப.ஆறுமுகம் அவர்களின் 13  ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனியன்று ஈரோட்டில்  நடைபெற்றது. தோழர் ப.ஆறுமுகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு  ரூ.10 லட்சம் மதிப்பிலான இடத்தை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரது 13ஆம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு  தாலுகாவிற்குட்பட்ட துரைராஜ் நகர் கிளையில் சி.வீர பாண்டியன் தலைமையில் மூத்த தோழர் கே.துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, ஜி. பழனிசாமி, கே.ஆர்.விஜயராகவன், சி.முருகேசன், மாவட் டக்குழு உறுப்பினர்கள் பி.ராஜா, என்.பாலசுப்பிரமணி, பா. லலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.