திருப்பூர், செப்.13- மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.தங்கவேல் 3 ஆம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பலர் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பி னரும், முன்னாள் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப் பினருமான தோழர் கே.தங்கவேல்-லின் 3 ஆம் ஆண்டு நினைவுதினம் மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட் டது. அதன்ஒருபகுதியாக திருப்பூர் மாந கராட்சி அலுவலகம் முன்பு தோழர் கே.தங்கவேல் உருவப்படம் மலர் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது. இங்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.காமராஜ் தலைமையில் நடை பெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மூத்த தொழிற்சங்கத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப் பினருமான சு.துரைசாமி, திமுக மாவட் டச் செயலாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான கே.செல்வ ராஜ், காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், சைமா முன்னாள் பொதுச்செயலாளர் எம்பரர் பொன்னுசாமி, மதிமுக மாந கர் மாவட்டச் செயலாளர் ஆர்.நாகராஜ், கொமதேக மாவட்டத் தலைவர் ரோபோ ரவிச்சந்திரன், திராவிடர் விடுதலை கழக நிர்வாகி முகில் ராசு, யாழ் ஆறுச்சாமி ஆகி யோர் தோழர் கே.தங்க வேலின் சிறப்புகளை நினைவு கூர்ந்து பேசி னர். இந்நிகழ்ச்சியில் மாந கராட்சி துணைமேயர் ஆர்.பாலசுப்ரமணியம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன், சைமா துணைத்தலைவர் பி.வி.எஸ்.முருக சாமி, பொதுச்செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், கிட்ஸ் பள்ளி குழும நிர்வாகி மோகன் கார்த்திக், தோழர் தங்கவேல் மூத்த மகள் டி.கவிதா, மரு மகன் ஏ.கே. தங்கவேலன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், ஊழியர்கள் உட்பட அனைத்துக் கட்சி களைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். முடி வில், சிபிஎம் திருப்பூர் தெற்கு ஒன்றி யச் செயலாளர் சி.மூர்த்தி நன்றி கூறி னார். கோவை இதேபோன்று, காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டக்குழு அலுவ லகத்தில், கே.தங்கவேல் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமை ஏற்றார். இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் யு.கே.சிவ ஞானம், கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.