ஈரோடு,டிச 6- அம்பேத்கரின் 63 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அம்பேத்கர் உருவப் படம் வைத்து மரியாதை செலுத்தி யுள்ளனர். அந்தியூர் ரவுண்டானா அருகில் நடைபெற்ற மரியாதை நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தாலுக்கா செயலாளர் ஏ.கே.பழ னிச்சாமி தலைமை வகித்தார். தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் பி.பி.பழனிச் சாமி, மதிமுக மாவட்ட துணைச்செ யலாளர் கொ.ராமன், சிபிஎம் தாலுகா செயலாளர் ஆர்.முருகே சன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப் பினர் எஸ்.வி.மாரிமுத்து, விசிக வணிகரணி மாநில துணைச் செயலாளர் கு.ஈஸ்வரன், விசிக ஒன் றிய செயலாளர் கு.தங்கராசு, ஆதித் தமிழர் பேரவை ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் பிரபு மற்றும் ஏ.எம்.செல்வம்,செபாஸ்டி யன், எல்.செல்வன்,தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தாலுகா பொருளாளர் டி.ராஜா உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பவானி தாலூகா பவானி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஆற்றலரசு,தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் தாலுகா செயலாளர் எஸ்.மாணிக் கம், மாற்றுத்திறனாளிகள் சங்கத் தின் மாவட்ட தலைவர் கே.பாலு, பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் நிர்வாகி எல்.பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பவானிசாகர் புளியம்பட்டி பேருந்து நிலையம் முன்பு ஒன் றிய தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியினர் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி யுள்ளனர். ஒன்றிய தலைவர் சி.சே கர், சிபிஎம் ஒன்றிய செயலாளர் டி.சுப்பிரமணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள் பி.ஜெ கநாதன், ஊட்டிசுப்பு உட்பட பலர் பங்கேற்றனர். சத்தியமங்கலம் நகராட்சி அலுவ லகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி யில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் பொருளாளர் ஆர்.சத்திய மூர்த்தி தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் கே.ரங்கசாமி, சிபிஎம் தாலுகா செயலாளர் கே.எம்.விஜய குமார், சிபிஎம் மாவட்டக்குழு உறுப் பினர் கே.ஆர்.திருத்தணிகாசலம், நிர்வாகிகள் சுப்பிரமணியம், ராஜம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு சூரம்பட்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் நகர துணை தலைவர் என்.எஸ்.ரவி, மாவட்ட தலைவர் அண்ணாதுரை, சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர். ரகுராமன், நகர செயலாளர் பி.சுந்தர ராஜன், தமுஎகச மாவட்ட செயலா ளர் சங்கரன், நிர்வாகி முருகையா உட்பட பலர் பங்கேற்றனர்.