உதகை, செப்.2- வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி யின் முதல்வராக கமாண் டென்ட் லெப்டினன்ட் ஜென ரல் வீரேந்திர வாட்ஸ் வெள் ளியன்று பொறுப்பேற்று கொண்டார். நேஷனல் டிபென்ஸ் அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமி யின் முன்னாள் மாணவரான வீரேந்திர வாட்ஸ், 19 குமா வோன் படைப்பிரிவில் 1988 ஆம் ஆண்டு நியமிக்கப்பட் டார். புதுதில்லியில் உள்ள புகழ்பெற்ற தேசிய பாதுகாப் புக் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியின் முன் னாள் மாணவரும் ஆவார். இந்நிலையில், வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி முதல்வராக பொறுப்பேற்று கொண்ட இவர், கல்லூரியின் பொது ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.