districts

அடக்குமுறைகளை எதிர் கொண்ட கம்யூனிஸ்ட் தோழர்.பி.தர்மலிங்கம் 3 ஆம் ஆண்டு நினைவு தினம்

நெருக்கடிகளையும், அடக் குமுறைகளையும் எதிர்கொண்டு ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தின் செயலாளராக பணியாற்றி மறைந்த தோழர் பி.தர்மலிங்கம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று அனுசரிக்கப்பட உள்ளது.  சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன் பாளையத்தில் 1935 ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தோழர் பி.தர்மலிங்கம்.  கம்யூனிஸ்ட் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு 1954 ல் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். இதனைத்தொடர்ந்து 1957ல் பெத் தநாயக்கன்பாளையம் கட்சி  கிளை செயலாளராக பணியாற்றி னார். அச்சமயத்தில் கல்வராயன் மலையில் இருந்து வரும் தண் ணீரை பயன்படுத்த கல்ப்பகனூரில் அணை கட்டக்கோரி 1956 ல் கம்யூ னிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தி யது. இப்போராட்டத்தில் பங் கேற்ற டி.ராமச்சந்திரன் மற்றும் பி.தர்மலிங்கம் உள்ளிட்ட தோழர் கள் மீது காவல் துறை வழக்கு  பதிவு செய்தது. அதனை வழக்க றிஞர் மோகன் குமாரமங்கலம் திறமையாக வாதாடி விடுதலை பெற்றுக்கொடுத்தார். தோழர். வி.பி.சிந்தன் கலந்து கொண்ட கூட்டத்தில் தர்மலிங்கம் தாலுக்கா செயலாளராக தேர்வு செய்யப் பட்டார். இதனையடுத்து  வங்கி எழுத்தர் பணியை விட்டுவிட்டு முழுநேர கட்சிப்பணியாற்றினார். 1969 ல் விவசாயிகள் சங்கம் முன்னெடுத்த நிலமீட்சி போராட்டத்தில் அடக்குமுறைகளை எதிர்கொண்டு வழக்குகளையும் நிலபிரபுக்களின் எதிர்ப்புகளையும் சந்தித்து இராமநாயக்கன்பாளையம், அப்பமசமுத்திரம், கல்ப்பகனூர் மற்றும் நொய்யமலை கிராமங் களில் தரிசு நிலங்களை செங்கொடி இயக்கம் கையகப்படுத்தி ஏழை தலித் மக்களுக்கு வினியோகம் (2500 ஏக்கர்) செய்யப்பட்டது. இக் காலத்தில் 1964 ஆண்டிலிருந்து -1972 ஆம் ஆண்டு வரை பி.தர்ம லிங்கம் கட்சி ஆத்தூர் தாலுக்கா செயலாளராக இருந்தார். இதனையடுத்து 

1973 முதல் 1984 வரை விச  மாவட்ட செயலாளர், தலைவர் பொருப்புகளையேற்று செயல் பட்டார். இதனைத்தொடர்ந்து 1985 ல் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டார். 1997 வரை கட்சியின் மாவட்டக்குழு செயலாளராக செயல்பட்டார்.  பின்னர் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினராகவும் தன் இறுதி மூச்சு உள்ளவரை முழுநேர கட்சி ஊழியராகவும், கட்சி உறுப்பினராக இருந்தார். சுமார் 66 ஆண்டுகள் செங்கொடி இயக்கத்திலும், 50 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராகவும் செயல்பட்டவர் தோழர். பி.தர்மலிங்கம். சேலம் மாவட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை, விவசாயிகள்  இயக்கத்தை கட்டுவதில் குறிப்பிடத்தக்க பங் காற்றியவர்.   நெருக்கடி மிகுந்த காலங்களி லும் அடக்குமுறைகளை எதிர் கொண்டும், கடும் நெருக்கடிகளை சந்தித்து இரவு பகல் பாராமல் காடு மேடுகளில் அலைந்து குடும் பம் உறவுகளை மறந்து தன் வாழ் நாளை எல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்காக உழைத்த, களப் பணியாற்றிய ஒப்பற்ற தலைவர் தோழர். பி.தர்மலிங்கம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று. தோழர் பிடிஎல் நினைவை போற்றுவோம். செவ்வணக்கம் தோழரே! - அரியா பாலு... சேலம்.