நீங்கள் குழந்தையாக இருக் கையில், உங்களின் பெற்றோ ரின் கைப்பிடித்து சாலையில் நடந்து செல்லும் போது, நீங்கள் பார்ப்பதெல்லாம் வேண்டும் என அடம்பிடித்து கேட்டு இருப்பீர்கள். அதில் ஏதேனும் ஒரு தருணத்தில் சாலை ஓரத்தில் வண்ண வண்ண நிறங்களில் கோழிக்குஞ்சுகள் விற் பதை பார்த்து இருப்பீர்கள். உங்க ளின் சிறிய வயதில் அந்த கோழிக் குஞ்சுகளை நீங்கள் வாங்கி வளர்க் கவும் ஆசைப்பட்டிருப்பீர்கள். அதற் காக அடம்பிடித்திருப்பீர்கள். நீங்கள் அந்த பல வண்ண நிறம் உள்ள கோழிக்குஞ்சுகளில் ஒரு சிலவற்றை வாங்கியும் இருப்பீர்கள். தற்போது நாம் முதிர்ச்சியான வயது எட்டி இருந்தாலும் நமக்கு குழந்தை கள் பிறந்த தற்போது கல்வி பயின்று வந்தாலும் நீங்கள் சாலையோரம் விற்கப்படும் கோழிக்குஞ்சுகளை காணும் பொழுது உங்களுக்கு அந்த பசுமையான நினைவுகள் நிச் சயம் கண் முன் வந்து போகும். கடந்த 10 ,20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது சாலையோரம் ஆங்காங்கே நாடோடி வியாபாரிக ளாக இருந்த கோழிக்குஞ்சு வியா பாரிகள், தற்போது ஏதோ ஒரு பகுதியில் தங்கள் வாழ்வாதாரத்திற் காக பல்வேறு சிரமங்களுக்கு மத்தி யிலும் இந்த தொழிலை மேற் கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம். எடப்பாடி பகு தியைச் சேர்ந்த கோழிக்குஞ்சுகள் விற்பனை செய்யும் கணேசன் எனும் வியாபாரி கூறும் பொழுது, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கோழி குஞ்சுகளை விற்பனை செய் யும் தொழிலை மேற்கொண்டு வரு கின்றேன்.
ஆரம்பத்தில் கோழிப் பண்ணைகளில் 60 பைசாவிற்கு சின்னஞ்சிறிய அளவிலான கோழிக் குஞ்சுகளை வாங்கி அதை பல்வேறு வண்ணங்களை நிறம் ஏற்றி ஒன்று முதல் இரண்டு ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்வோம். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை நகரத்தின் வளர்ச்சி பெரிய அளவுக்கு இல்லாத நிலை யில் இட பரப்பளவு அதிகளவு இருந் தது. இதன் காரணமாக அதிக அளவு கோழிக்குஞ்சுகள் தினந்தோறும் விற்பனையாகும். பராமரிப்பு செய்வ தற்கும் இடவசதி இருக்கும் என்ப தால் நிறைய பேர் இந்த சிறிய அள விலான கோழிக்குஞ்சுகளை விரும்பி வாங்கி வளர்த்து வந்த னர்.
கிராமங்களில் இருந்து சொந்த வேலையாக நகர்ப்புறம் வரும் கிராம மக்களும் எங்களிடம் அதிக அளவு கோழிக்குஞ்சுகளை வாங்கி தங்கள் வளர்ப்பு கால்நடைகள் பட்டியலில் இதையும் சேர்த்து வளர்ப்பார்கள். எங்களுக்கு வியாபாரமும் நன்கு நடைபெற்றது. ஆனால், காலம் செல்லச் செல்ல நகர்ப்புறம் நன்கு வளர்ச்சி பெற்றதால் கிராமப்புறத்தி லும் கோழிகள் வளர்ப்பு என்பது மெல்ல மெல்ல குறைந்து வருகி றது. மேலும், முன்பு போல இப்போது ஆடு, மாடு கோழி வளர்க்க பொது மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. தற்போது கோழிக்குஞ்சுகளை வாங் கினாலும் அவற்றை பராமரிப்பது கடின மான பணியாக உள்ளது. மேலும், வாங்கிச் சென்ற ஒரு சில தினங்க ளிலே அது இறந்து விடுகிறது என்ப தாலும், பொதுமக்கள் கோழி குஞ்சு களை வாங்க ஆர்வம் காட்டுவ தில்லை. இதன் காரணமாக வியா பாரம் மிகவும் மந்த நிலைக்கு சென்று விட்டது. ஒரு நாளைக்கு பத்து முதல் 20 கோழி குஞ்சுகளை விற்றாலே பெரிய விசயமாக உள் ளது. அதுவும் எங்களுடைய நிரந்தர வாடிக்கையாளர் யார் என்று கேட் டால் பள்ளி செல்லும் சிறுவர் சிறுமி யர் தான். அவர்கள் தங்கள் பெற் றோரிடம் அடம் பிடித்து கேட்பதால் தான் ஏதோ ஒன்று இரண்டு வியா பாரம் நடைபெற்று வருகிறது. தற் போதைய சூழலில் கறிக்கோழி குஞ்சுகள் 10 ரூபாய்க்கும் நாட்டுக் கோழி குஞ்சுகளை 20 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறோம். பொதுவாக காய்கறி வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வகையான வியாபாரம் சார்ந்த தொழிலைப் போல் இதை எளிதாக மேற் கொள்ள முடியாது. ஒவ்வொரு கோழிக்குஞ்சுக்கும் தொடர்ந்து அதற்குரிய தீவனம் அளிக்க வேண் டும். அதை சரியான முறையில் பராமரிக்காவிட்டால் கோழிக்குஞ்சு கள் விற்பனையின் போது உயிரி ழந்து விடும்.
எனவே, இது மிகவும் எச்சரிக்கை யுடன் செய்ய வேண்டிய தொழிலா கும். இதையெல்லாம் தாண்டித்தான் இந்த தொழிலை மேற்கொண்டு வரு கிறேன். அப்படி இருந்தும் போதிய வருவாய் கிடைக்காத நிலையே உள் ளது. முன்பெல்லாம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எங்களைப் போன்ற நாடோடி கோழிக்குஞ்சு வியாபாரிகள் அதிகளவு இருப்பார் கள். தற்போது ஒரு சிலர் மட்டுமே இந்த தொழிலில் தற்போது வரை உள்ளனர். தமிழகத்தில் எத்த னையோ சிறு குறு தொழில்கள் கால ஓட்டத்தில் காணாமல் போய் விட்டது. அதன்படி இந்த தொழிலும் அடுத்த ஐந்து 10 ஆண்டுகளில் முழுமையாக இல்லாத நிலை ஏற் படும் என தெரிகிறது. அதற்கு முன் பாகவே மாற்று தொழிலுக்கு சென்று விடலாமா என யோசித்து வருகி றேன் என ஆதங்கத்தோடு தெரி வித்தார். தமிழகத்தில் பாரம்பரியமான அடையாளங்கள் நிறைய இருந்தா லும் காலப்போக்கில் அவை ஒன்று ஒன்றாக மறைந்து வருகிறது. அதே போல நாடோடி வியாபாரிகளாக இருக்கும் இவர்களைப் போன்ற கண்ணுக்குத் தெரியாத பல்லா யிரக்கணக்கான வியாபாரிகளை நாம் அடையாளம் கண்டு அவர்க ளுக்கு மாற்றுத்தொழிலை கற்றுக் கொடுப்பதும் அவர்களை மேம்ப டுத்த வேண்டியதும் காலத்தின் மிகத் தேவையான ஒன்று.
-எம்.பிரபாகரன்