districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை - இருவர் கைது

கோவை, ஏப்.30- கோவையில் கல்லூரி மாணவியை ஓட்டல் அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆங்கிலோ இந்தியா 20  வயது இளம்பெண் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில்  2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் சரவணம் பட்டி பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். மாணவியின்  பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனி யாக வாழ்த்து வருகின்றனர். இதனால் மாணவிக்கு கல்லூரி  கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவி, கல்லூரி மாணவர் ஒருவரிடம் உதவி கேட்ட தாக தெரிகிறது. அப்போது அந்த மாணவர் மூலம் கோவை  கொண்டயம்பாளையத்தை சேர்ந்த ஜெர்மன் ராஜேஷ் (22),  ரவீந்திரன் (22) ஆகியோர் மாணவிக்கு அறிமுகம் ஆனார்கள்.  கடந்த 23ஆம் தேதியன்று மாணவி தங்கி இருக்கும் அறைக்கு சென்ற ஜெர்மன் ராஜேஷ்,ரவீந்திரன் ஆகியோர்  அங்கிருந்த மாணவியிடம் கல்வி கட்டணம் செலுத்துவதற்கு  உதவுவதாக கூறினர். இதையடுத்து மாணவியை அங்கிருந்து  ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அங்கு  அறை எடுத்து மாணவியை தங்க வைத்தனர்.  இந்நிலையில் ஜெர்மன் ராஜேஷ், ரவீந்திரன் ஆகியோர்  மாணவியை ஓட்டல் அறையில் அடைத்து வைத்து, 3 நாட் களாக கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து தப்பிய மாணவி, நடந்த சம்பவம் குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஓட்டலுக்கு சென்றனர். ஆனால் அங்கிருந்து  ஜெர்மன் ராஜேஷ், ரவீந்திரன் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.  இந்நிலையில்  ராஜேஷ், ரவீந்திரன் 2 பேரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் போலீசாரிடம் சிக்கினர். அப்போது, தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்ப முயன்றபோது சந்தேகத்தின்பேரில் இருவரையும் போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசா ரணை மேற்கொண்டதில், 2 பேரும் ரவுடிகள் என்பதும், கல்லூரி மாணவியை அடைத்து வைத்து பாலியல் வன் கொடுமை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள்  2 பேரையும் போலீசார் கைது செய்து மகளிர் போலீசாரிடம்  ஒப்படைத்தனர். முன்னதாக, போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சி யில் கீழே விழுந்ததில் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு  ஏற்பட்டது. இதற்காக இருவரும் கோவை அரசு  மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

கோவை புறநகர் பகுதியில் பரவலாக மழை

கோவை, ஏப்.30- கோவை புறநகர் பகுதியில் ஞாயிறன்று பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம்  தணிந்து குளிர்ந்த சூழலால் நிலவியது. கடந்த ஒரு வாரமாக வெப்பத்தில் தாக்கம்  அதிகரித்திருந்தன. இதனால் கோவை மாவட்ட புறநகர் பகுதிகளான கவுண்டம் பாளையம், ஆனைகட்டி, சின்ன தடாகம், வர பாளையம், பொன் ஊத்து, பன்னிமடை, துடி யலூர், பெரியநாயக்கன்பாளையம் போன்ற  பகுதிகளில் வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்தன. தற்போது காலையில் வெயிலும்,  மாலையில் கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில், ஞாயிறன்று கவுண்டம் பாளையம், வடவள்ளி, பேரூர் ஆகிய பகுதி களில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக  இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இத னால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். அதே சமயம் சில பகுதிகளில் மின் சாரம் துண்டிப்பால் பொது மக்கள் சிரமத் துக்கு உள்ளாகி உள்ளனர். மேலும், வாகன  ஓட்டிகள் சாலையில் தேங்கி மழை நீரால் குறைந்த வேகத்திலேயே வாகனங்களை இயக்கினர்.  கடந்த ஒரு வாரத்திற்கு பின் பெய்த மழை யால் கோவை மாநகரம், புறநகர் பகுதிகளில்  குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

சேவல் சண்டை - 6 பேர் கைது

ஈரோடு, ஏப்.30- அந்தியூர் அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம், அந்தியூர், புதுக்காடு மலையடிவார பகுதியில் சேவல்களை சண்டையிட வைத்து சூதாட்டம் நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இத னையடுத்து சனியன்று மாலை அப்பகுதிக்குக் காவல் துறையினர் சென்றனர். அப்போது 6 பேர் ரூ.ஆயிரம் மற்றும் இரண்டு சேவல்களை சண்டையிட வைத்து சூதாட்டத்தில் ஈடு பட்டிருந்தனர். சேவல்கள் மற்றும் ரொக்கத்துடன் இறந்து கிடந்த மற்றொரு சேவலையும் காவல் துறையினர் கைப் பற்றினர். அந்தியூர் மீசை துரையன், நஞ்சுண்டாபள்ளம் கணேசன், அத்தாணி செல்வன், கருப்புசாமி, பசுவராஜ் மற் றும் ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தருமபுரி: கஞ்சா இல்லாத கிராமம்

தருமபுரி, ஏப்.30- பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள போசிநாயக்கன் அள்ளி கஞ்சா இல்லா கிராமம் என மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர். தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள போசிநாயக் கன்அள்ளி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பெரிய வர்கள் முதல் இளைஞர்கள் வரை போதை பழகத்திற்கு அடி மையாகி இருந்து வந்தனர். இதனை போக்கும் வகையில் இந்த ஊராட்சி மன்ற நிர்வாகம், இப்பகுதியில் உள்ள இளை ஞர்கள் மற்றும் பெரியோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கஞ்சா இல்லா கிராமமாக மாற்றிவிட்டது. இந்நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப் பளார் ஸ்டீபன் ஜேசுபாதம் கலந்து கொண்டு போசிநாயக்கன் அள்ளி கிராமத்தை, கஞ்சா இல்லா கிராமமாக அறிவித்து, இக் கிராமத்தில் அறிப்பு பலகையை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் இது வரை 4 கிராமங்கள் கஞ்சா இல்லாத கிராமமாக கண்டறிந்து அறிவிப்பு பலகை வைக்கபட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தபட வேண்டும். அப்படி குழந்தை திருமணங்கள் நடைபெற்றால் சிறை தண்டணை நிச்சயம் உண்டு. இதுகுறித்து அனைத்து கிராம பகுதிகளி லும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சி யில் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ்  மற்றும் கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை பிரச்சாரம்

ஈரோடு, ஏப்.30- ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடை விடுமுறையை அடுத்து பள்ளிகள் திறப்பிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி எஸ்.கே.சி ரோடு சாலையில் அமைந்துள்ள பகுதியில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கே.சுமதி தலைமையில் பள்ளி ஆசிரியர் 8 பேர், கணினி ஆசிரியர், மழலையர் வகுப்பு சிறப்பாசிரியர்கள், இல்லந்தேடி  கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு அரசு சலுகைகள் பற்றி எடுத்துக் கூறினர். பள்ளியின் சிறப்பம்சங்கள் பற்றி தெளிவாக கூறியும் மாணவர் சேர்க்கை பிரச்சாரம் செய்தனர். சேர்க்கை விழிப்புணர்வு  துண்டு பிரசுரங்கள் ஸ்டோனி பாலம் அருகில் உள்ள அண்ணா நகர், சாந்தான் கருக்கு, கிராமடை மற்றும் சூரம்பட்டி வலசு குடியிருப்பு பகுதியில் விநியோகிக்கப்பட்டது. அரசுப் பள்ளியில் சேர்த்திடுங்கள். அரசு வழங்கும் சலுகைகளை பெற்றிடுங்கள். அரசு பள்ளியை கொண்டாடுவோம். அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம் என பிரச்சாரத்தின் போது எடுத்துரைக்கப்பட்டது. ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இடைநின்ற மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மின்சாரம் தாக்கி விசைத்தறியாளர் பலி

நாமக்கல், ஏப்.30- ராசிபுரம் அருகே விசைத்தறியில் பணி புரிந்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உரிமையாளர் பரிதாபமாக உயிரி ழந்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வர் அர்த்தநாரீஸ்வரர் (45). இவர் தனது வீட் டில் சொந்தமாக 4 விசைத்தறி இயந்திரங்கள் அமைத்து குடும்பத்தினருடன் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், விசைத்தறி இயந்தி ரத்தில் அர்த்தநாரீஸ்வரன் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக  மின்சாரம் தாக்கியது. அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தி னர், அவரை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அர்த்தநாரீஸ்வரர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரி சோதனைக்காக ராசிபுரம் மருத்துவமனை யில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர் பாக நாமகிரிப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்னா யானையை தேடும் பணியில் வனத்துறை

கோவை, ஏப்.30- மக்னா யானைக்கு பொருத்தப் பட்டிருந்த ரேடியோ காலர் கருவி  செயல்படாததால், யானையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட மக்னா என்ற யானை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப் சிலிப் யானை குத்தி வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த யானை கடந்த பிப்.22 ஆம் தேதியன்று வனப்பகு தியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து கோவையை நோக்கிச் சென் றது. இதையடுத்து மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட நிலை யில், யானைக்கு ரேடியோ காலர்  கருவி பொருத்தப்பட்டு ஆனைமலை  புலிகள் காப்பகம், வால்பாறையை அடுத்துள்ள மானாம்பள்ளியில் உள்ள மந்திரிமட்டம் பகுதியில் விடப் பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. தற்போது ரேடியோ காலர் கருவி பழு தாகி செயலிழந்து உள்ளதால், யானை நகர்ந்து செல்லும் இடத்தை கண்காணிக்க முடியாமல் வனத் துறையினர் திணறி வந்தனர். இந்நிலையில், மக்னா யானை மீண் டும் இரண்டாவது முறையாக வனப் பகுதியை விட்டு வெளியேறி பொள் ளாச்சி, சரளபதி பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து சுற்றி வந்தது. விவசாய நிலத்திற்குள் புகுந்த யானை, குடியிருப்புக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.  ஆனால், சனியன்று அதிகாலையில் ரோந்து பணியிலிருந்த வனத்துறை வாகனத்தை மக்னா யானை தாக்கி யதில், வாகனம் தலைக்குப்பறாக கவிழ்ந்து விழுந்தது. இதில் வனத் துறையினர் 6 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதனை அடுத்து டாப் சிலிப் பகுதியிலிருந்து கொண்டு வரப் பட்ட கும்கி யானைகளான சின்னத் தம்பி, ராஜவரதனன் மற்றும் முத்து என மூன்று கும்கி யானைகளை வைத்து மக்னா யானையின் நடமாட் டத்தை கண்காணித்து வந்தனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள விவ சாய தோட்டத்திற்குள் புகுந்து  யானை எப்போது வேண்டுமானா லும் பயிர்களை சேதப்படுத்தி விடுமோ என்று விவசாயிகள் மிகுந்த அச்சத் தில் உள்ளனர். மேலும் சரளபதி, தம் பம்பதி வனப்பகுதியை ஒட்டியுள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்புக் குள் யானை புகுந்து விடுமோ என்றும் அப்பகுதி மக்களும் அச்சத்தில் உள் ளனர். எனவே, இந்த யானையை வேறு வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். இல்லையென்றால் மக்னா யானையை பிடித்து கரோலில் அடைக்க நடவடிக்கை வேண்டும் என வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நடக்க இருப்பவை

மே 1 தொழிலாளர் தின விழா பேரணி, பொதுக்கூட்டம் நாள்: 01.05.2023, திங்கட்கிழமை நேரம்: மாலை 4 மணி, இடம்: வடகோவை, சிந்தாமணியிருந்து துவங்கும் பேரணி, பரியல் கிரவுண்டில் நிறைவடைகிறது. பங்கேற்பு: பி.ஆர்.நடராஜன் எம்.பி., எம்.ஆறுமுகம் முன்னாள் எம்எல்ஏ ஏற்பாடு: சிஐடியு, ஏஐடியுசி.