districts

img

கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, அக்.11- அரசு கலைக்கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரி யர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு கல்லூரிகளில் இணைப்பேராசிரியர், பேராசியர் பணி மேம்பாடு தொடர்பான அரசாணை எண் 5-யினை முழுவ துமாக அமல்படுத்த வேண்டும். எம்பில், பிஎச்டி ஊக்க ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும். அரசு கல்லூரிக ளில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வினை உடனடி யாக நடத்திட வேண்டும். அரசு கலைகல்லூரிகளுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ம ண்டல பொருளாளர் முனைவர் கோ.பிரபாகரன் தலைமை தாங்கினார். பெரியார் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் திருமூர்த்தி, இணைப்பொருளாளர் முனைவர் பிர சண்ண வெங்கட்டேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.