சேலம், மார்ச் 5- சேலத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப் பாக உள்ளனரா? என்பதை உறுதி செய்து, ஹோலி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து ஆட்சியர் மற் றும் வடமாநில தொழிலாளர்கள் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர். சேலம், ஜான்சன்பேட்டையில் குடிசை மாற்று வாரிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பகுதி யில் பணிபுரிந்து வரும் வெளிமாநி லத் தொழிலாளர்களை மாவட்ட ஆட் சியர் செ.கார்மேகம், சனியன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து கலந்துரை யாடினர். இதன்பின் அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், வெளி மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப் பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப் பதை உறுதிபடுத்தும் வகையில் சேலம், ஜான்சன்பேட்டையில் பணி புரிந்து வரும் பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, மத்தியபிர தேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 126 வெளிமாநிலத் தொழிலாளர் களை நேரில் சந்தித்து நலம் விசா ரித்ததில், அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றனர். குறிப்பாக, வரும் மார்ச் 8 ஆம் தேதியன்று ஹோலி பண் டிகையை கொண்டாட மகிழ்ச்சி யுடன் தங்கள் ஊருக்கு சென்றுவர இருப்பதாக தெரிவித்ததையொட்டி, ஹோலி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வெளிமாநி லத் தொழிலாளர்களுக்கு இனிப்பு களை ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டோம். மேலும், மாவட்டத்தில் பணிபு ரிந்து வரும் தொழிலாளர்களிடம் தாங் கள் பாதுகாப்பாக உள்ளது குறித்து அவர்களின் சொந்த மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு தகவல் தெரி விக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு சொந்த மாநிலங்களுக்குச் செல்ல விரும்பும் வெளிமாநிலத் தொழிலா ளர்களுக்காக சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. சமூக ஊடகங்க ளின் மூலம் வதந்திகள் பரப்புபவர் களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, என்றார். இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மாந கர காவல் துணை ஆணையர் மாட சாமி, தொழிலாளர் நலத்துறை பி. கிருஷ்ணவேணி, சங்கீதா (சமூக பாதுகாப்பு திட்டம்), துணை இயக்கு நர் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம்) தினகரன், துணை இயக் குநர், (கட்டடம் மற்றும் கட்டுமானம்) குமரேசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.