districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ரூ.17 லட்சம் மோசடி

நாமக்கல். நவ.27-  ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக பணத்தை பெற்றுக் ்கொண்டு ஏமாற்றிய 3 பேரை போலீசார் தேடி வருகின்ற னர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பிலிக் கல்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (41). தேங்காய் மண்டி  வைத்து நடத்தி வருகிறார். இவரது நண்பரான திருச்செங் கோடு அருகே மொளசியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (41). குமாரபாளையத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலு வலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கவிதா (37) மற்றும் உறவினரான சுரேஷ் (45)  ஆகிய 3 பேரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவ தாகவும், ஈஸ்வரனையும் கூட்டாக தொழில் செய்ய அழைத் துள்ளனர். இதையடுத்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்காக கடந்த 2021-ம் ஆண்டு முதல் பல தவணையாக ஈஸ்வர னிடம் ரூ.17 லட்சம் வரை மூவரும் பணத்தை பெற்றதாக கூறப் படுகிறது.  இதனிடையே, ரியல் எஸ்டேட் தொழில் எது வும் செய்யாத நிலையில் விஜயகுமார், கவிதா, சுரேஷ் ஆகிய  3 பேரும், மேலும் பணம் கேட்டு ஈஸ்வரனை வற்புறுத்தி யுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ஈஸ்வரன் மேற்கொண்டு பணம் தராமல் இதுவரை கொடுத்த ரூ.17 லட்சத்தை திருப் பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு 3 பேரும் பணத்தை  திருப்பி தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து ஈஸ்வரன் ஜேடர்பாளையம் காவல் நிலை யத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு  செய்து போலீசார் தலைமறைவான விஜயகுமார், கவிதா, சுரேஷ் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

போதை பொருள் தடுப்பு ஆலோசனை

கோவை, நவ. 27- போதை பொருள் தடுப்பு குறித்து கோவை மாநகர காவல்  ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  கோவையில் போதை பொருள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ள சூழலில், மாநகர காவல் ஆணையா ளர் அலுவலகத்தில், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.இக் கூட்டத்தில் ஆய்வாளர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடந்த சில மாதங்களாக கோவை மாநகரப் பகுதியில்  போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருவதாகவும் அதனை தடுக்கும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.  இதில், வருகின்ற காலங்களில் போதை பொருள் விற் பனை செய்பவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்ப டும் எனவும், மீறி விற்பனை செய்பவர் மீது கடுமையாக தண்டிக்கப்படுவார் என்று காவல் ஆணையர் எச்சரித்தார்.  போதைப் பொருள் புழக்கத்தினால் பல்வேறு இளைஞர்கள்  மற்றும் கல்லூரி மாணவர்கள் அடிமையாகி தங்கள் வாழ்வா தாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதினால் இந்த ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மாணவர் தற்கொலை:  போலீசார் விசாரணை

கோவை, நவ.27- பெற்றோருக்கு செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு,  கோவை தங்கும் விடுதியில் கல்லூரி மாணவர் தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  ஜம்மு காஷ்மீர் கோஜிபுர் கேரியைச் சேர்ந்தார் வருண்  சர்மா(20). இவர் கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை யில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி, சத்தியில் உள்ள  கல்லூரியில் பிடெக் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.  இந்நிலையில், ஞாயிறன்று இரவு வருண் சர்மா தனது  பெற்றோரிடம் செல்போனில் பேசினார். அப்போது அவர் தனக்கு வாழபிடிக்க வில்லை தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சிய டைந்த அவரது பெற்றோர் உடனே விடுதி உரிமையாள ருக்கு செல்போனில் தகவல் கொடுத்தனர். அவர் உடனே விடுதி ஊழியர் ஒருவருக்கு செல்போ னில் அழைத்து விவரத்தை சொல்லி அந்த மாணவரின் அறைக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். அவர்  சென்று பார்த்த போது வருண் சர்மா தூக்கில் தொங்கியபடி  இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த காட்டூர் போலீசார்,  உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காட்டூர்  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக் கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

போலீசாரை தாக்க முயன்ற வாலிபர் கைது

கோவை, நவ.27-  கோவையில் போலீசாரை தாக்க முயன்ற வாலிபர் கைது  செய்யப்பட்டார். கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் போக்குவ ரத்து பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் மது சூதனன். இவர் ஞாயிறன்று மருதமலை அடிவாரம் வண்டிப் பேட்டை சந்திப்பில் சக போலீசாருடன் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக சாலை விதி முறைகளை மீறி பைக்கில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து  விசாரித்தார். இதில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், மதுசூ தனை தகாத வார்த்தைகளால் பேசி உருட்டுக்கட்டையால் தாக்க முயன்றார். இதைப்பார்த்த மற்ற போலீசார் அவரை தடுத்தனர். இதுகு றித்த புகாரின்பேரில், போலீசார் விசாரித்தனர். அதில் போலீ சாரை தாக்க முயன்றது மருதமலை அடிவாரத்தில் தேங்காய்  கடை நடத்தி வரும் மர்லின் (35) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ் திரைப்படங்களில் துப்பாக்கி சத்தம் அதிகம் கேட்கிறது

ஈரோடு, நவ. 27- தமிழ் மண்ணைப்பொருத்தவரையில், துப்பாக்கி கலாச்சரம் இல்லாத நிலையில், சமீப காலமாக தமிழ் திரைப்படங்களில் துப் பாக்கி சத்தம் அதிகம் கேட்பதாக எழுத் தாளர் த.ஸ்டாலின் குணசேகரன் குற்றம்சாட் டினார். மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநி லப் பொதுக்குழுக் கூட்டம் ஈரோடு, மாணிக் கம்பாளையம், பாரதி அரங்கில் நடைபெற் றது. அதில் உரையாற்றிய மக்கள் சிந்த னைப் பேரவையின் மாநிலத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் மேலும் பேசிய தாவது, போதைப் பொருட்கள் பயன்பாட் டால் உருவாகிவரும் சமூக சீர்கேடு குறித்து  பொறுப்புள்ள குடிமக்கள் அனைவரும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம் இது. இளைஞர்கள், மாணவர்கள் இவற்றிற்கு எவ்வகையிலும் ஆட்படாமல் இருக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் . அத்திசை  நோக்கிச் சிந்திக்கவும் செயல்படவும் மக்க ளைப் பொதுநோக்கில் சமூக உணர்வுடன் ஒருங்கினைப்பது இன்றைய காலத்தின் தேவையாகும். திரைப்படம் மிகவும் சக்திவாய்ந்த சாத னம். சமூகம் சார்ந்த , குடும்ப மேம்பாட்டை வலியுறுத்தும் சில திரைப்படங்கள் வரு வதை வரவேற்க வேண்டும். அதே சம யத்தில் நேரடியாகவோ , மறைமுகமாகவோ வன்முறைக் கலாச்சாரத்தை இளைஞர்கள் மனதில் விதைக்கும் சில திரைப்படங்கள் சமீபத்தில் வெளிவருவது கவலைதரத் தக்க தாகும். மக்களின் அன்றாட வாழ்க்கையில் தமிழ் மண்ணைப் பொறுத்தவரையில் துப்பாக்கிச் சத்தம் எங்கும் கேட்பதில்லை. அத்தகைய சூழலில் சில திரைப்படங்களில் துப்பாக்கிகளே அதிகம் பேசுகிற காட்சிகள் வலுவான தாக்கத்தை உருவாக்கும் அள வுக்கு காட்டப்படுகின்றன. சாதி, மதப் பிரிவினைகள், அதனால் ஏற்ப டும் சச்சரவுகள், சண்டைகள் முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டியவை. சகோதரச் சிந் தனை எல்லா இடங்களிலும்  எல்லோர் மனங்க ளிலும் விதைக்கப்பட வேண்டியவை என்றார்.  மாநிலமெங்குமிருந்து வந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இக் கூட்டத்தில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக பேர வையின் துணைத்தலைவர் பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் என்.பழனிசாமி நன்றி கூறினார்.

தவறுதலாக செலுத்திய பணத்தை தராமல் 20 மாதமாக இழுத்தடிக்கும் மின்வாரியம்

திருப்பூர், நவ. 27 - திருப்பூர் மின்வாரியத்தில் தவறுதலாக செலுத்திய பணத்தை திரும்ப தராமல் 20  மாதங்களுக்கு மேலாக இழுத்தடித்து வரு கின்றனர். இந்த பணத்தை பெற்றுத் தரும் படி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுக் கப்பட்டுள்ளது. திருப்பூர் முத்தணம்பாளையம்  பாலாஜி நகர் 3ஆவது வீதியைச் சேர்ந்தவர் எஸ்.சாம்பசிவன் (70). ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மகன் செல் வன் வீட்டில் வசித்து வருகிறார். இந்த  வீட்டிற்கு மும்முனை மின்சாரம் இணைப்பு  பெறுவதற்கு விண்ணப்பம் செய்திருக்கி றார். அதற்கு ரூ.8ஆயிரத்து 368 செலுத்தும் படி மின்வாரியத்தினர் கூறியுள்ளனர். இதில் தனது மகன் செல்வன் பெயரில் இந்த  பணத்தை செலுத்துவதற்கு பதிலாக, தனது  பெயரில் ரூ.8 ஆயிரத்து 368-ஐ கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி மின்வாரியத்திற்கு செலுத்தியிருக்கிறார். மகன் பெயரில் மின் இணைப்புக் கேட் டதற்கு, தனது பெயரில் மின் வாரியத்தில் பணம் செலுத்தியதால் அதை ஏற்க முடி யாது என மின்வாரியத்தில் மறுத்துவிட்டனர். இதையடுத்து தனது பெயரில் தவறுதலாக செலுத்திய பணத்தை திரும்ப ஒப்படைக்கக் கோரி  உரிய சான்றுகளுடன் மின்வாரிய செயற்பொறியாளருக்கு கடந்த 2022 ஆம்  ஆண்டு மார்ச் 16ஆம் தேதி கடிதம் கொடுத் திருக்கிறார். அத்துடன் அதிகாரிகளிடம் நேரில் விபரத்தைத் தெரிவித்து கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால் 10 மாதங்களுக்கு மேலாக எந்த  பதிலும் தரவில்லை. இதையடுத்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கடந்த 2023ஆம்  ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் தேதி மனு  அனுப்பி இருக்கிறார். அதற்கு நிதி ஒதுக் கீட்டுக்குப் பிறகு பணம் திரும்பக் கிடைக் கும் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது வரை 20 மாதங்கள் கடந்து விட்டது. இன்னும் பணம் திரும்பக் கிடைக்கவில்லை.  இதனால் கவலையுடன், மன உளைச் சல் அடைந்திருப்பதாகக் கூறி, தனக்கு வர  வேண்டிய தொகையை தனது வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் திங்க ளன்று கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்.

தேவையான விதைகள் கையிருப்பு உள்ளது: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர், நவ.27- திருப்பூர் மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்குத் தேவையான விதைகள், உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட  ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழைப்பொழிவு 618.20 மில்லி மீட்டர். நடப்பு  ஆண்டில் இதுவரை 494.30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள் ளது. கடந்த சில நாள்களாக பருவமழை தொடர்ந்து பெய்து  வருவதால் விவசாயிகள் சாகுபடி பணியைத் தொடங்கியுள் ளனர். இந்நிலையில், பயிர் சாகுபடிக்குத் தேவையான நெல்  மற்றும் பிற பயிறு வகை தானியங்கள், விதைகள் போதிய  அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல் 11.03  டன், சிறுதானியங்கள் 14.74 டன், பயிறு வகைகள் 16.57  டன், எண்ணெய் வித்துகள் 3.45 டன் இருப்பு உள்ளது. மேலும்,  பயிர்கள் சாகுபடிக்குத் தேவையான உரங்களான யூரியா 1,767 டன், டி.ஏ.பி. 1,218 டன், காம்ப்ளக்ஸ் 5,847 டன் மற்றும்  சூப்பர் பாஸ்பேட் 568 டன் அளவு இருப்பு வைக்கப்பட்டுள் ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலிபாளையத்தில் இன்று மின்தடை

திருப்பூர், நவ.27- முதலிபாளையம், பழவஞ்சிபாளையம், நல்லூர் துணை  மின்நிலையப் பகுதிகளில் 28ஆம் தேதி செவ்வாயன்று மாதாந் திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி  முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.  மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்: சிட்கோ, பொன் னாபுரம், முதலிபாளையம், ராக்கியாபாளையம், நல்லூர்,  மண்ணரை, பாரப்பாளையம், கோல்டன் நகர், ஆர்.வி.இ.ந கர், கூலிபாளையம், காசிபாளையம், சர்க்கார் பெரியபாளை யம், பெட்டிக்கடை, சென்னிமலைபாளையம், ரெங்கேக வுண்டம்பாளையம், விஜயாபுரம், மானூர், செவந்தாம்பா ளையம் மற்றும் நல்லூர் துணை மின்நிலையத்திற்கு உட் பட்ட நல்லூர், காளிபாளையம், சாணார்பாளையம், முத்த ணம்பாளையம் மற்றும் ராக்கியாபாளையம் பிரிவு. பழவஞ்சி பாளையம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட செட்டிபா ளையம், பழவஞ்சிபாளையம், பூங்காநகர், பாலாஜி நகர், அய் யப்பா நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய் யப்படும்.

உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம்

திருப்பூர், நவ.27 - திருப்பூரில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட, உரிமை  கோரப்படாத வாகனங்கள் வரும் டிச.7ஆம் தேதி ஏலம் விடப் படுகிறது.  திருப்பூர் வீரபாண்டி, நல்லூர் மற்றும் மங்கலம் காவல்  எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற வழக்கில் பதிவு செய் யப்பட்ட, உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்  விடப்பட உள்ளது. அவ்வகையில், 3 காவல் நிலையங்களைச்  சேர்ந்த, 163 வாகனங்கள் திருப்பூர் தெற்கு தாசில்தார் அலுவ லகத்தில் வரும் டிச.7ஆம் தேதி காலை 11 மணிக்கு ஏலம் விடப் பட உள்ளது. ஏலம் கோர விருப்பமுள்ள நபர்கள் ஆதார் அட்டை, வைப்பு தொகை 10 ஆயிரம் ரூபாயை வங்கி வரை வோலையாக தாசில்தார் அலுவலகத்தில் வரும் 6ஆம் தேதி  மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண் டும். மேலும் மோட்டார் சைக்கிள் ஏலம் எடுக்க விரும்புவோர்  வீரபாண்டி, நல்லூர், மங்கலம் காவல் நிலையங்களை அணுகி, ஏலத்தில் விடப்படும் வாகனங்களை பார்வையிட லாம். கூடுதல் விபரங்களுக்கு தெற்கு தாலுக்கா அலுவல கத்தை தொடர்பு கொண்டு அணுகலாம் என்று காவல் துறையி னர் தெரிவித்துள்ளனர்.

தவறுதலாக செலுத்திய பணத்தை தராமல் 20 மாதங்களுக்கு மேலாக இழுத்தடிக்கும் மின்வாரியம்

திருப்பூர், நவ. 27 - திருப்பூர் மின்வாரியத்தில் தவறுதலாக செலுத்திய பணத்தை திரும்ப தராமல் 20  மாதங்களுக்கு மேலாக இழுத்தடித்து வருகின்றனர். இந்த பணத்தை பெற்றுத் தரும்படி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு  கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் முத்தணம்பாளையம்  பாலாஜி நகர் 3 ஆவது வீதியைச் சேர்ந்தவர்  எஸ்.சாம்பசிவன் (70). ரயில்வேயில் பணி யாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மகன்  செல்வன் வீட்டில் வசித்து வருகிறார். இந்த  வீட்டிற்கு மும்முனை மின்சாரம் இணைப்பு  பெறுவதற்கு விண்ணப்பம் செய்திருக்கிறார்.  அதற்கு ரூ.8 ஆயிரத்து 368 செலுத்தும்படி  மின்வாரியத்தினர் கூறியுள்ளனர். இதில்  தனது மகன் செல்வன் பெயரில் இந்த  பணத்தை செலுத்துவதற்கு பதிலாக, தனது  பெயரில் ரூ.8 ஆயிரத்து 368-ஐ கடந்த 2022 ஆம்  ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி மின்வாரி யத்திற்கு செலுத்தியிருக்கிறார். மகன் பெயரில் மின் இணைப்புக் கேட்ட தற்கு, தனது பெயரில் மின் வாரியத்தில் பணம்  செலுத்தியதால் அதை ஏற்க முடியாது என  மின்வாரியத்தில் மறுத்துவிட்டனர். இதைய டுத்து தனது பெயரில் தவறுதலாக செலுத்திய  பணத்தை திரும்ப ஒப்படைக்கக் கோரி  உரிய  சான்றுகளுடன் மின்வாரிய செயற்பொறியா ளருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி கடிதம் கொடுத்திருக்கிறார். அத்து டன் அதிகாரிகளிடம் நேரில் விபரத்தைத் தெரி வித்து கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால் 10 மாதங்களுக்கு மேலாக எந்த  பதிலும் தரவில்லை. இதையடுத்து தகவல்  பெறும் உரிமைச் சட்டத்தில் கடந்த 2023ஆம்  ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் தேதி மனு  அனுப்பி இருக்கிறார். அதற்கு நிதி ஒதுக்கீட் டுக்குப் பிறகு பணம் திரும்பக் கிடைக்கும் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை  20 மாதங்கள் கடந்து விட்டது. இன்னும் பணம்  திரும்பக் கிடைக்கவில்லை.  இதனால் கவலையுடன், மன உளைச்சல்  அடைந்திருப்பதாகக் கூறி, தனக்கு வர வேண் டிய தொகையை தனது வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்.

பெருமாநல்லூர் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு

திருப்பூர், நவ. 27 -  பெருமாநல்லூர் ஆதிதிராவிடர் கால னியை சேர்ந்த சின்னசாமி என்பவர் அளித்த  புகாரின்பேரில் பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சி.டி.சி. வேலிச்சாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.   பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளி சின்னசாமி (40). என்பவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, நான்  அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவன். எனது  மூதாதையர் வாழ்ந்துவந்த வீட்டில், குடும்பத் துடன் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகி றேன். கடந்த ஜூலை 20ஆம் தேதி குடியிருக் கும் வீடு பெருமாநல்லூர் ஊராட்சிக்கு சொந்த மானது எனக் கூறி, வீட்டை இடிக்க ஊராட்சி  துணைத்தலைவர் சிடிசி வேலுச்சாமி ஜேசிபி  இயந்திரத்துடன் வந்து, வீட்டின் முன்பிருந்த விறகுகளை அப்புறப்படுத்தினார். அப்போது  குடியிருக்கும் வீட்டை எதற்காக இடிக்கி றீர்கள்? என்று கேட்டேன். கலைஞர் உரிமைத் தொகை விண்ணப்பம் இந்த இடத்தில் வைத்து தர உள்ளோம் என்றார். இதைய டுத்து எங்கள் பகுதியை சேர்ந்தவர்களுக்கு தகவல் அளித்தேன். அவர்கள் வந்து பெரு மாநல்லூர் போலீஸாரிடம் புகார் அளிக்க  சென்றேன். காவல் ஆய்வாளர் இல்லாததால்  மறுநாள் வர திட்டமிட்டேன். இதையடுத்து மறுநாள் வந்த துணைத்தலைவர் வேலுச் சாமி மற்றும் அவரது ஆட்கள் வீட்டை இடிக்க  முற்பட்டனர். மேலும் என்னையுன் அடிக்க வந் தனர். இது தொடர்பாக வன்கொடுமை தடுப்பு  சட்டத்தின் கீழ் வேலுச்சாமி மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வன்கொடுமை தடுப்பு (எஸ்சி/எஸ்டி) சட்டப்பிரிவுகளின் கீழ் பெரு மாநல்லூர் காவலர்கள் துணைத்தலைவர் வேலுச்சாமி (57) உட்பட 10 பேர் மீது வழக்கு  பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சிமன்ற துணை தலை வர் சிடிசி வேலுசாமி கூறியதாவது, தனது  இடம் என்று சின்னசாமி கூறுவது நத்தம் புறம் போக்கு நிலம் ஆகும். அதற்கான ஆவணங் கள் உள்ளன. அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து செட் அமைக்கப்பட்டிருந்தது. பஞ்சா யத்து வேலைகளுக்காக அந்த இடம் தேவைப்பட்டதால் ஆகிரமிப்பை அகற்றும் படி கூறினேன். அப்போது மூன்றாவது நபர்  ஒருவர் சம்பந்தமே இல்லாமல் வாக்குவாதத் தில் ஈடுபட்டார். அவரின் தூண்டுதலின் பெயரில் சின்னசாமி என் மீது இந்த பொய்  வழக்கை தொடுத்துள்ளார், என்று கூறி னார்.

திருப்பூர் சாலை விபத்தில் இருவர் பலி

திருப்பூர், நவ. 27 – திருப்பூர் நகரில் போக்குவரத்து நெரிசல் மிக்க புஷ்பா  சந்திப்பு மேம்பாலம் அருகே கல்லூரிப் பேருந்து மோதியதில்  இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே  பலியானார்கள். திருப்பூர் புஷ்பா சந்திப்பு பகுதியில் போக்குவரத்து சிக் னல் இல்லாமல் வாகனங்கள் செல்லும் வகையில் கடந்த  வாரத்தில் இருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பப் டுள்ளது. இந்த மாற்றம் செய்யப்பட்ட நிலையில் திங்க ளன்று இருசக்கர வாகனத்தில் ஒரு பெண் உள்ளிட்ட இருவர்  ரயில்வே மேம்பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப் போது அதே பாதையில் ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல் லூரி பேருந்து சென்றது. ரயில்வே மேம்பாலம் செல்வதற்கு  முன்பாக, புஷ்பா சந்திப்பு திருப்பத்தில் இருசக்கர வாக னத்தின் மீது கல்லூரி பேருந்து மோதியதில், இருசக்கர வாக னத்தில் பயணித்த இருவரும் பேருந்து சக்கரத்தில் சிக்கி  பலத்த காயம் அடைந்தனர். இருவரும் சம்பவ இடத்திலேயே  பலியானார்கள். சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு உடனடியாக திருப்பூர்  வடக்கு காவல் நிலையத்தினர் வந்து, இறந்தவர்கள் உடல் களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இறந்தவர்கள் போயம்பாளையத்தில் வசித்துவந்த தொட்டி பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் (60) அவரது மனைவி  பூங்கொடி (55) என தெரிய வந்துள்ளது. காவல் துறையினர்  தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் கடும் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்து அவிநாசி சாலையில் நீண்ட தூரம் வாக னங்கள் நெரிசலில் சிக்கி இருந்தன. அதேபோல் எதிர்புற மும் மேம்பாலம் முழுவதும் வாகன நெரிசல் ஏற்பட்டது.  காவல் துறையினர் இதனை ஒழுங்குபடுத்தினர்

மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

நாமக்கல். நவ.27- நாமக்கல் மாவட்ட புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையின் செயல்பாடுகள் திங்களன்று முதல் மக்களின் பயன்பாட்டு தொடங்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உமா மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அப் போது புறநோநாளிகள் வரும் வாகனங்களை மருத்துவ மனை மேற்பகுதிக்கு கொண்டு சென்று விடவும், புறநோ யாளி பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தி நுழைவுச்சீட்டு வழங்கவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து நோயாளிகள் வசதிற்கு ஏற்றவாறு இருக்கை வசதிகள்,  குடிநீர் வசதி மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மக்காச்சோளம் பயிர்களில் நோய் தாக்கியதால் பாதிப்பு

தருமபுரி, நவ.27- தருமபுரி மாவட்டம். பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் விவசாயிகள் அதிக அளவில்  மக்காச்சோளம் பயிரிட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக அதிக அளவாக அதிகாரப் பட்டி, மரியம்பட்டி, சமத்துவபுரம், பள்ளிப் பட்டி, மெனசி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  விவசாயிகள் சுமார் 150 ஏக்கரில் மக்காச் சோளம் பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதி விவசாயிகள், வருடத்திற்கு இருமுறை மக் காச்சோளம் பயிர் மகசூல் செய்து வருவது வழக்கம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இம்முறை அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளனர். ஆனால், இப்பகுதி யில் போதிய அளவு மழை இல்லாததால் மக்காச்சோள பயிர்களில் நோய் தாக்குதல் ஏற்பட்டு பயிர்கள் அதிகளவில் புழு தாக்குத லுக்கு ஆளாகியுள்ளது. இது விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது. அதிகாரப்பட்டியில் விவசாயி பெரியசாமி சுமார் 7 ஏக்கரில் பயிரி டப்பட்டிருந்த மக்காச்சோளம் நோய் தாக்கு தல் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.  மக்காச்சோள விலையும் இந்த ஆண்டு  வீழ்ச்சி அடைந்துள்ளது அதனால் தங்க ளுக்கு விலை நிர்ணயம் செய்து  நிவாரணம் வழங்க வேண்டும் என்று அப்பகுதியில்  பயிர் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூளைச்சாவு அடைந்து மறுவாழ்வு கொடுத்தவருக்கு ஆட்சியர் அஞ்சலி

தருமபுரி, நவ.27- மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகளை தானம் செய்து மற்றவர்களுக்கு மறுவாழ்வு அளித்த இறந்தவரின் உட லுக்கு ஆட்சியர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த எர்ரசீகல அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் கவிய ரசு (23). கடந்த 24ஆம் தேதி அதியமான் கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் படுக்காய மடைந்தார். அவரை மீட்டு தருமபுரி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த னர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, சேலம் மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் கள் கவியரசுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்ப தால் சிகிச்சை அளித்தும் பயனில்லை என தெரிவித்தனர். இதனையடுத்து, மீண்டும்  தருமபுரி அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அவர் மூளைச்சாவு அடைந்தார். குடும்பத்தார்   உடல் உறுப்பு களை தானம் செய்ய முன் வந்தனர். இதன் பின்னர் அறுவை சிகிச்சை மூலம் இதயம், மற்றும் நுரையீரலை சென்னைக்கும், சிறுநீரகம் கோயம்புத்தூர் மற்றும் அரசு சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கல்லீரல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், அனுப்பி வைக் கப்பட்டது. கிரீன் கார்ட் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு இத யத்தை பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர்.  இதைத்தொடர்ந்து திங்களன்று, இறந்த கவியரசுவின் உட லுக்கு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும்  மருத்துவர்கள், மருத்துவக்கல்லூரி மாணவர்கள்,  செவிலியர்கள், ஊழியர்கள், உறவினர்கள் மலர் தூவி  அஞ்சலி செலுத்தினர். கவியரசு உடல் அவரது சொந்த  ஊரான எர்ரசீகல ஹள்ளி கிராமத்தில் அரசு மரியாதையு டன் நல்லடக்கம் செய்யப்பட்டது.