நாமக்கல், மே 21- கனமழையால் பாதிக்கப்பட்ட குடி யிருப்பு பகுதிகளை மாவட்ட ஆட்சி யர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டார். நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், அணைப்பாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ச.உமா, கனமழை யால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி களை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சி யர் செய்தியாளர்களிடம் கூறியதா வது, நாமக்கல் மாவட்டத்தில், இராசி புரம் மற்றும் புதுச்சத்திரம் பகுதிக ளில் மிக அதிகமாக மழைப்பொழிவு பதி வாகியுள்ளது. இதில், அணைபாளை யம் கிராமம் தாழ்வான பகுதியாக உள் ளதால் ஏற்கனவே நெடுஞ்சாலைத் துறை மூலமாக நீர் வெளியேற கால் வாய் அமைக்கப்பட்டது. ஆனால், அதை மண் மூடியதால் மழை நீர் வெளி யேற முடியவில்லை. பின்பு உடனடி யாக இப்பகுதியில் நீர் தேக்கி உள்ள தாக தகவல் கிடைத்தவுடன், உள்ளாட்சி அமைப்புகள், வருவாய் துறையினர் மற் றும் நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் 3 ஜே.சி.பி வாகனங்கள் மழை நீர் தங்கு தடையின்றி வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் 12 வீடுகள் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வீடுகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் உடனடியாக பிளீசிங் பவுடர் போட்டு சுத்தம் செய்திட நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நக ராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் தேவையான பணியாளர் கள் நியமிக்கப்பட்டு டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு பரவாமல் தடுக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது என்றார்.