districts

img

கழிவறைக்கு பூட்டு: அதிகாரிகளை கடிந்து கொண்ட ஆட்சியர்

நாமக்கல், மார்ச் 16- நாமக்கல் அரசு மருத்துவமனையி லுள்ள கழிவறைக்கு பூட்டு போடப் பட்டிருந்தது குறித்து அதிகாரிகளை ஆட்சியர் கடிந்து கொண்ட சம்பவத் தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பர பரப்பு ஏற்பட்டது. நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் நோயா ளிகளின் உறவினர்களுக்காக மருத்துவ மனை வளாகத்தில் கழிப்பறை வசதி கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல பிணவறையின் அருகே காத்தி ருப்பு அறையும் உள்ளன. இந்நிலை யில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை வளாகத்தில் அரசு நிகழ்ச்சிக் காக வந்த மாவட்ட ஆட்சியர் ச.உமா, மருத்துவமனையில் உள்ள கழிவ றைக்குள்ளே சென்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது கழிவறைகள் திறக்கப்படாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், ஒவ்வொரு அறைக்கு சென்றார், தொடர்ந்து அவர் காத்திருப்பு அறைக்கு சென்ற அவர் நுழைவாயில் பூட்டியிருந்ததை கண்டு,  மருத்துவக்கல்லூரி முதல்வர் சந்தா  அருள்மொழியிடம் கடிந்து கொண்டார். மேலும், காத்திருப்பு அறையில் நோயா ளிகளின் பழைய படுக்கையை அகற்ற வேண்டும். இல்லையென்றால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும்  வந்து பார்ப்பேன் என மருத்துவமனை யில் இருந்து கோபத்துடன் கிளம்பி சென்றார்.