கோவை, அக்.11- பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிக்குட்பட்ட நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, பொருட் கள் இருப்பு குறைவாக இருந்ததால் விற்பனையாளருக்கு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அபராதம் விதித்தார். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம், மாலேகவுண்டம்பாளையத்திலுள்ள பொள்ளாச்சி நுகர் வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நியாய விலைக்கடையில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டைதாரர் களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம் குறித்த பதிவுகளை விற்பனை முனைய இயந்திரத்தில் (Point of Sale) ஆய்வு செய்ததுடன், அரிசி, பாமாயில், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரங்கள் குறித்த பதி வேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நியாய விலைக்கடையில் பொருட்களில் இருப்பு குறை வாக இருப்பதை கண்டறிந்து, நியாய விலைக்கடை விற்பனை யாளருக்கு அபாரதம் விதித்தார். இதன்பின் குடும்ப அட்டை தாரர்களிடம் அனைத்து பொருட்களும், முறையாக கிடைக் கிறதா? பொருட்களின் தரம் மற்றும் எடைகள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, மாலேகவுண்டன்பாளையம் முதல் வடக்கிபாளையம் வரை ரூ.67.70 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருவதை ஆட்சியர் பார்வையிட்டு, சாலையின் ஓரங்களில் உள்ள வடிகால் அமைப்புகளை முறையாக சுத்தம் செய்து, புற்களை அகற்றி தண்ணீர் தடையின்றி செல்வதற்கு தேவையான நடவடிக் கைகள் எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத் தினார். மேலும், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதி வேடுகளையும், பதிவறையினையும் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கே.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் (பொ) அனிதா, உதவி இயக்குநர் (சாலை மற்றும் பாலங்கள்) செந்தில் குமார், கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.