உதகை, செப்.26- வளர்ச்சி பணிகளை சரியாக மேற்கொள் ளாத புகாரின் அடிப்படையில் மேலூர் ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகி யோரை ஏன் பதவி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு ஆட்சியர் நோட்டீஸ் பிறப் பித்து உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றி யங்களில் 35 ஊராட்சிகள் உள்ளன. இதில் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேலூர், பர்லியார், வண்டிச்சோலை, உபதலை, பேரட்டி, எடப்பள்ளி என 6 கிராம ஊராட் சிகள் உள்ளன. இதில் மேலூர் ஊராட்சி தலை வராக ரேணுகா, துணை தலைவராக நாகராஜ் ஆகியோர் உள்ளனர். இந்த ஊராட்சிகளில் நடைபாதை அமைத்தல், தடுப்புச்சுவர் கட்டு தல், சாலை சீரமைத்தல், குடிநீர் குழாய் பதித் தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. இந்நிலையில், மேலூர் ஊராட்சி உட்பட ஒரு சில இடங்களில் வளர்ச்சி பணிகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், வளர்ச்சி பணி கள் சரியாக கண்காணிக்கப்படவில்லை என் பதால் தரம் இல்லாமல் இருப்பதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்து விசா ரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்திடம் பொதுமக் கள் மனு அளித்தனர். இதனையேற்று விசா ரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யு மாறு துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத் தரவிட்டார்.
அதில் பல்வேறு இடங்களில் வளர்ச்சி பணிகள் தரம் இல்லாமல் மேற்கொள்ளப்பட் டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தர மில்லாமல் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளை கண்காணிக்க தவறியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரியும் சந்திர சேகர், பொறியாளர் ராஜ்குமார் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் அம் ரித் உத்தரவிட்டார். வட்டார வளர்ச்சி அலுவ லர் மற்றும் பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களி டையே கலகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மேலூர் ஊராட்சி பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டது சம்பந்தமாக தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994- 205 மற்றும் 206 -ன் படி, ஊராட்சி தலைவர் ரேணுகா, துணைத் தலைவர் நாகராஜ் ஆகி யோரை ஏன் பதவி நீக்கம் செய்யக்கூடாது என்று விளக்கம் கேட்டு அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும், தரமற்ற முறை யில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக் கும் அச்சுறுத்தல் ஏற்படுத்திய ஒப்பந்ததாரர் கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒப்பந் ததாரர்களிடம் 3 சதவிகித கமிசன் கொடுத் தால் தான் ஊராட்சி பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஊராட்சி துணைத் தலைவர் நாகராஜ் பேசிய வீடியோ வெளியா னது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தலை வர் மற்றும் துணைத்தலைவர் அளிக்கும் விளக்கம் திருப்தி அளிக்காதபட்சத்தில் அவர் கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் பறிபோகும் என்றும் தெரிகிறது.