districts

img

கோவையில் பரவும் ப்ளூ காய்ச்சல் முகக்கவசம் அணிய ஆட்சியர் அறிவுறுத்தல்

கோவை, நவ.22- கோவையில் மிக வேக மாக ப்ளு வைரஸ் காய்ச்சல்  பரவி வருகிற சூழலில், முகக் கவசம் கட்டாயம் இல்லை என்றாலும், நோய் தாக்கா மல் இருக்க முகக்கவசத்தை  அணிவது நல்லது என ஆட் சியர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், சூலூரில் நடைபெற்ற மக்க ளுடன் முதல்வர் முகாமை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் பரிச்சாத்த முயற்சியாக கோவையில் நடத்தப்படுகிறது. 12 துறைகள் மூலமாக 33 துறை ரீதியான சேவைகள் செய்யப்படுகிறது. இந்த மனுக்கள் அனைத் தும் தனியாக வகுப்ப ஆய்வு செய்யப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக் கப்படும். இந்த முன்னோட்டம் நன்றாக நடந்தால் மீண்டும் இது விரிவுபடுத்தப்படும், இந்த முகாம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு பின்பு இதன் நிறை, குறைகள் சரி செய்யப்படும், என் றார். மேலும், கோவையில் பரவி வரும் ப்ளூ வைரஸ் தொடர்பாக நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மழைக்காலம் என்பதால் அதிக அளவில் தொற்றுகள் ஏற் படுகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த முகாமை  பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள லாம். கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு முகாம்கள் நடத் தப்பட உள்ளது. அதிலும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். ப்ளூ வைரஸ் தாக்குதல் பொதுமக்களி டம் காணப்பட்டால் முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நோய்கள் இருக்கும் பட் சத்தில் முகக்கவசத்தை அணிந்து கொள்ள லாம். முக கவசம் என்பது கட்டாயம் அல்ல, இருப்பினும் நோய் இருக்கும் பட்சத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித் தார்.