கோவை, ஜன.7- பொள்ளாச்சி அருகே பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இருவ ருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. கோவை மாவட்டம், பொள் ளாச்சியை அடுத்த வடுகபா ளையம் பகுதியைச் சேர்ந்த பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு விமல்ராஜ், கார்த்திக் ஆகியோர் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலை யில், பெண்ணை தாக்கி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விமல்ராஜ், கார்த்திக் ஆகிய இருவருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராத மும் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார். மேலும், குற்றவாளி கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான நிலையில் காவல் துறையி னர் அவரை தேடி வருகின்றனர்.