districts

எல்லா வரியையும் வசூலித்து விட்டு, திருப்பி தருவது திறனற்ற செயல்: பி.டி.ஆர். சாடல்

கோவை, மார்ச் 1- எல்லா வரியையும் வசூலித்து விட்டு, ஒன் றிய அரசு திருப்பி தருவது திறனற்ற செயல் என தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனி வேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டினார். கோவை - அவிநாசி சாலையில் உள்ள  ஜி.டி.நாயுடு வளாகத்தில் ‘எக்ஸ்பிரி மெண்டா’என்ற அறிவியல் மையம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தி யாளர்களிடம் அவர் பேசுகையில், பட்ஜெட் டில் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை திட்டம் முதலமைச்சர் சொல்வது நடக்கும். கல்வித் துறையில் வேறு எந்த மாநிலத்தையும் விட கூடுதலாக தமிழ்நாடு செலவு செய்கிறது. கடந்த ஜிஎஸ்டி கவுன்சிலில் 2020-21 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகை முழுமையாக விடுவிக்கப்பட்டதாக ஒன்றிய நிதியமைச்சர் சொன்னார். ஆனால்  ரூ.4231 கோடி இன்னும் வர வேண்டியுள்ளது. இந்த மாதத்திற்குள் ரூ.4 ஆயிரம் கோடி  வரும். அது தவிர்த்து 4 ஆயிரம் கோடி வரை  இழப்பீட்டு தொகை வர வேண்டிய பாக்கி உள்ளது. மாதந்தோறும் வரும் ஜிஎஸ்டி தொகையும் தாமதமாக வருகிறது.  எல்லா வரியையும் ஒன்றிய அரசு வசூலித்து, திருப்பி தருவது திறனற்ற செயல். அந்தந்த மாநிலம்  வசூலிக்கும் தொகையை வைத்துக் கொள்வ தும், ஒன்றிய அரசிற்கான வரியை ஒன்றிய  அரசிற்கு செலுத்துவதும் என்னை பொருத்த வரை சரியான முறை. அடுத்த ஜிஎஸ்டி கூட் டம் மதுரையில் நடைபெற உள்ளது. அக்கூட் டத்தில் ஜிஎஸ்டி செயல்பாட்டை சிறப்பிக்க  முதல்வர் ஒப்புதலுடன் சில கருத்துக்களை சொல்ல உள்ளேன்.  நாங்கள் ஆட்சிக்கு வரும் போது வரு வாய் பற்றாக்குறை ரூ.62 ஆயிரம் கோடியாக இருந்தது. நிதி பற்றாக்குறை ரூ.90 ஆயிரம்  கோடியும் இருந்தது. முதல் ஆண்டில் வரு வாய் பற்றாக்குறையை ரூ.46 ஆயிரம் கோடி யாக குறைத்தோம். நிதி பற்றாக்குறையை 70  சதவிகிதம் குறைத்தோம். கடந்த ஆண்டைப் போலவே  இந்தாண்டும் முன்னேறுவோம்.  2014க்கு பிறகு 2021 வரை 7 ஆண்டுகளில் நிதி நிலை சரிவை மூன்றில் இரண்டு பங்காக 2 ஆண்டுகளில் திருத்தியுள்ளோம். நிதித் துறை யில் பல திருத்தங்களை செய்ததால் இந்த ளவு செய்ய முடிந்தது. இன்னும் பணி பாக்கி  இருக்கிறது, என்றார்.  மேலும், அதானி பங்குசந்தை குளறுபடி கள் தொடர்பான கேள்விக்கு, செபி, ஆர்பிஐ, எக்ஸ்சென்ஸ்க்கு எப்படி தெரியாமல் இருந் தது? இதுகுறித்து பலமுறை நாடாளு மன்றத்திலும் கூறிய போதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இப்போது வெளியே வந்தது என்பதை சிந்திக்க வேண்டும், என் றார்.