districts

img

இடிந்து விழும் நிலையில் அரசு தொகுப்பு வீடுகள்

தருமபுரி, ஜன.8- தீர்த்தமலை அருகே எப்பொ ழுது வேண்டுமானாலும் இடிந்து  விழும் நிலையிலுள்ள அரசு  தொகுப்பு வீடுகளை சீரமைத்துத் தர வேண்டும், என அப்பகுதி  பட்டியலின மக்கள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர்  வட்டம், தீர்த்தமலை ஊராட்சிக்குட் பட்ட பொய்யப்பட்டி அருந்ததியர் காலனியில் 40க்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்கள் கூலி தொழிலாளிகளாக உள்ளனர். சொந்தமான விவசாய நிலம் இல்லை. நூறு நாள் வேலை  மற்றும் செருப்பு தைக்கும் தொழில்  செய்து, வாழ்க்கை நடத்தி வரு கின்றனர். இப்பகுதி மக்களுக்கு எம்ஜிஆர் காலத்தில் அரசு தொகுப்பு வீடுகள் இலவசமாக கட் டிக் கொடுக்கப்பட்டது. தற்போது அந்த வீடுகள் சேதடைந்து  காணப்படுகின்றன. பொருளாதா ரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள இந்த மக்கள், பழுதடைந்த அரசு தொகுப்பு வீடுகளை சரி செய்ய முடியாத நிலையில் உள்ள னர். இந்நிலையில், தற்போது இங் குள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் தளத்தில் கான்கிரீட் ஆங் காங்கே பெயர்ந்து விழுந்து  கம்பிகள் தெரியும் அளவிற்கு இருக் கின்றன, மழைக்காலங்களில் பழு தடைந்த கான்கிரீட் கூரை விரிசலில்  வீட்டினுள் தண்ணீர் ஒழுகுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்  பெய்து முடிந்த பெஞ்சல் புயல்,  காரணமாக குடியிருப்பு கட்டிடங் கள் முழுவதும் மழை நீரில் ஊறி  இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள் ளது. எப்பொழுது வேண்டுமானா லும் இடிந்து விழும் என்ற அச்சத் தில் வசித்து வரும் குடும்பத்தினர், தென்னை மர ஓலையால் அமைக் கப்பட்ட குடிசைகளில் குழந்தை களை தங்க வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். தங்களின் நிலை குறித்து ஊராட்சி நிர்வா கம், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோ ரிடம் பலமுறை முறையிட்டும்  இதுவரை எந்தவொரு நடவடிக் கையும் இல்லை. அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே, தங்க ளின் வாழ்வாதார பொருளதார நிலையை கணக்கில் கொண்டு  தமிழக அரசும், மாவட்ட நிர்வாக மும் புதிய வீடு கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.