districts

சர்வதேச யோக போட்டியில் தங்கம் வென்ற கோவை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

சர்வதேச யோக போட்டியில் தங்கம் வென்ற கோவை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு கோவை, ஜூன் 2- கம்போடியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச யோக  போட்டியில் தங்க பதக்கங்களை வென்று கோவை திரும் பிய மாணவ, மாணவிகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசிய அளவிலான யோகா போட்டியில் தேர்வு செய்யப் பட்ட யோகா போட்டியாளர்களுக்கு, சர்வதேச அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி கம்போடியா நாட்டில் உள்ள சியாம் ரீப் நகரில் நடைபெற்றது. கடந்த மே 27 ஆம் தேதியன்று  நடை பெற்ற இப்போட்டியில் இந்தியா, அர்ஜெண்டினா, தாய் லாந்து, கம்போடியா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடு களைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில் ஆர்ட்டிஸ் டிக், ரிதமிக், அத்லெட் உள்ளிட்ட போட்டிகள் நடை பெற்றன. மயூர் ஆசனம், திருவிக்கிரமா ஆசனம், சிரசா சனம், சக்ராசனம் என பல்வேறு ஆசனங்கள் கொண்டு யோகா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கோவையைச் சேர்ந்த  யோவா யோகா அகாடமியின் தலைமை பயிற்சியாளரும், பிர பல யோகா உலக சாதனை மாணவி வைஷ்ணவியிடம் பயிற்சி பெற்ற ஆறு மாணவ, மாணவிகள் உட்பட ஏழு பேர் முதல் பரிசாக தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்த னர். இதையடுத்து தாயகம் திரும்பிய மாணவ, மாணவி களுக்கு கோவை விமான நிலையத்தில் பெற்றோர்கள் மற் றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். சர்வதேச அளவில் யோகா போட்டியில் சாதனை படைத்து, இந்தியா விற்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர்.