திருப்பூர், மார்ச் 9 - கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செம்மிபாளையம் ஊராட்சியில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த் தேக்க தொட்டி ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்ச்சி கே.எஸ்.என்.புரத்தில் நடைபெற்றது. செம்மி பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் ஷீலா புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஊராட்சிமன்ற உறுப்பி னர்கள், ஊராட்சி செயலாளர், பல்லடம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் புண்ணி யமூர்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன், பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர். பரமசிவம், லட்சுமி மில் கிளைச் செயலாளர் ராமநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர்.