கோவை, பிப்.22- தில்லி ஜேஎன்யு பல்கலைக் கழகத்தில் பயிலும் தமிழக மாண வர்கள் மீது கொலை வெறி தாக் குதல் நடத்திய பாஜகவின் ஏபிவிபி குண்டர்களை கண்டித்து கோவை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் தில்லியில், ஜவகர் லால் நேரு பல்கலைகழகத்தில் பயிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தயும், மார்க்ஸ், பெரியார், லெனின் தலைவர்களின் படங்களை கிழித்து சேதப்படுத்திய ஏபிவிபி குண்டர்களை கண்டித்தும், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடும் ஏபிவிபியை தடை செய்ய வேண்டும், தாக்குதலுக்கு காரண மான ஏபிவிபி குண்டர்களை கைது செய்ய வலியுறுத்தி கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். கோவை அரசு கலைக்கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், இந்திய மாணவர் சங்கம், தபெதிக மாணவர் அமைப்பினர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக, ஆர்ப்பாட் டத்திற்கு இந்திய மாணவர் சங்க அரசு கல்லூரி கிளை தலைவர் எம்.வெயில் முத்து தலைமை ஏற் றார். இதில், மாணவர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.ரமேஷ்கண்ணன், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் தினேஷ் ராஜா, தந்தை பெரியார் திராவிடக் கழக மாணவர் அமைப்பின் நிர் வாகிகள் கோகுல், ரஞ்சித்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.