கோவை, ஏப்.7- பண புழக்கத்துடனான பன்முகத் தன்மை கொண்ட பழைய கோவையை மீட்டெடுக்க, வெறுப்பை கக்கும் பாஜ கவை விரட்டியடித்திட உதயசூரிய னுக்கு வாக்களியுங்கள் என கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கண பதி ராஜ்குமார் வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணியின், கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட் பாளர் கணபதி ராஜ்குமார், கணபதி, உடையாம்பாளையம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற் கொண்டார். அப்போது வாக்காளர்க ளிடம் பேசிய அவர், எதிரே நிற்கக்கூ டிய சக்திகள் நம்மை நாட்டை இன ரீதி யாக மத ரீதியாக பிரித்து நமக்குள் பிரச்சனை ஏற்படுத்தி, பத்தாண்டுக ளாக ஆட்சி புரிந்து வந்துள்ளனர். பழைய கோவை எப்படி இருந்ததோ? அதற்கு நேர் எதிரான கோவையாக மாற்றி மக்களுடைய வெறுப்பை சம்பா தித்து வைத்திருக்கிறார்கள். இவற்றை நாம் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். மீண்டும் 2014க்கு முன்பு எப்படி கோவை இருந்ததோ? பண புழக் கத்துடனான பன்முகத்தன்மை கொண்ட பழைய கோவையை மீட்டெ டுக்க நீங்கள் அனைவரும் வரக்கூடிய 19ஆம் தேதி உதய சூரியனுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என வாக்கு சேகரித்தார்.. இந்த வாக்கு சேகரிப்பு இயக்கத் தில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வா கிகள், தொண்டர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.