districts

img

கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல்

கோவை, ஜூன் 23- கோவை மாவட்ட திட்டக்குழு உறுப் பினர் தேர்தல் வெள்ளியன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது. இதில் கவுன்சிலர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் வாக் களித்தனர்.  மாவட்ட திட்டக்குழு என்பது மாவட்ட ஊராட்சிக் குழுவின் ஒரு அலகு ஆகும். இதன்  தலைவராக மாவட்ட ஊராட்சிக் குழுத் தலை வர் செயல்படுவார். துணைத்தலைவராக மாவட்ட ஆட்சியர் செயல்படுவார். இதன்  உறுப்பினர்களை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர். அந்தந்த மாவட்ட, சட்டமன்ற, நாடாளுமன்ற  உறுப்பினர்களும் இக்குழுவின் உறுப்பினர் கள். மாவட்டம் முழுமைக்குமான வளர்ச்சித் திட்டம் தயாரித்து, மாநில திட்டக்  குழுவிற்கு அனுப்பு வைப்பது மாவட்டத் திட்டக் குழுவின் கடமையாகும்.  இதில் கோவை மாவட்டத்திற்கு ஊராட்சியில் இருந்து 5 உறுப்பினர்கள், பேரூ ராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சியில் இருந்து 13 உறுப்பினர்கள் என மொத்தம் 18 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பின்னர் இந்த 18 பேரும் வாக்க ளித்து ஒருவரை தேர்ந்தெடுப்பர்.  வெள்ளியன்று நடைபெற்ற தேர்தலில் மாநகராட்சி கவுன்சிலர்கள் 100, 7 நகராட்சி களில் உள்ள 196 கவுன்சிலர்கள், 33  பேரூராட்சிகளில் உள்ள 511 கவுன்சிலர்கள்  என 824 உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர்.  இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட் டுள்ளது. இத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, ஜூன் 28ஆம் தேதியன்று புதிதாக தேர்ந்தெ டுக்கப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் களின் முதல் கூட்டம் நடைபெறும் என  மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. சேலம் சேலம் மாவட்டத்தின் திட்டக்குழு உறுப் பினருக்கான தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் வேட்பு மனு  தாக்கல் செய்தனர். இதற்கிடையே 10 திட்டக் குழு  உறுப்பினர்கள் ஏற்கனவே போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில்,  வெள்ளியன்று மீதமுள்ள 8 உறுப்பினர் களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக 9, திமுக 9, பாமக 4, சிபிஐ 1 என  24 பேர் போட்டியிடுகின்றனர். சேலம் மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி என 697 உறுப்பி னர்கள் இதில் வாக்களிக்க தகுதி பெற்ற வர்கள் ஆவர். அதன்படி, வெள்ளியன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது.  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் தேர்தல் நடைபெறுவதால், ஆட்சி யில் வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.