districts

img

கோவை: மூதாட்டியைக் கற்பழித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் மூதாட்டியைக் கற்பழித்து கொலை செய்த வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் பொன்னுசாமி(48) . இவர் கடந்த 2021  ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டியைக் கற்பழித்து கொலை செய்துள்ளார். ஆனைமலை காவல்துறையினர் பொன்னுசாமி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் குற்றவாளியான பொன்னுசாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,500 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த வழக்கைச் சிறந்த முறையில் புலன் விசாரணை செய்து, சாட்சிகளைச் சிறந்த முறையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய, நீதிமன்ற தலைமைக் காவலர் பிரபு, மற்றும் அதிகாரிகளைக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்.

;