கோவை, ஜூலை 19- கோவை கொடிசியா வளாகத்தில் ஜூலை 22 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித் துள்ளார். கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து 6 ஆவது ஆண்டாக நடத்துகின்ற கோவை புத்தக திருவிழா - 2022 தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ஆட்சியர் அலு வலக வளாகத்தில் செவ்வாயன்று நடைபெற் றது. இக்கூட்டத்தில் கொடிசியா தலைவர் வி.திருஞானம், செயலாளர் ஆர்.ஷசிகுமார், புத்தக திருவிழா சேர்மன் பி.விஜய் ஆனந்த் மற்றும் பல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை மாவட்டம், கொடிசியா வளாகத்தில் வரும் ஜூலை 22 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை 6 ஆவது கோவை புத்தகத் திரு விழா - 2022 நடைபெறவுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடமாக நடைபெறாத புத்தக திருவிழா இந்த வருடம் புத்துணர்ச்சிடன் நடைபெற உள்ளது. இத்திருவிழாவை கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா, தென்னிந் திய புத்தக பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவற் றுடன் இணைந்து நடத்துகின்றன. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 300 அரங்குகள், 280 பதிப்பாளர்கள், 2 லட்சத்திற்கு மேற்பட்ட புதிய புத்தகங்கள் இடம்பெறவுள்ளன. இப் புத்தக திருவிழாவில் ஒரு லட்சம் மாணக் கர்கள் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடை பெறவுள்ளன.
கவிஞர் நிழலி, சுரேஷ் பிரதீப், வடிவரசு ஆகிய 3 இளம் படைப்பாளர்களுக்கு ஜூலை 22 ஆம் தேதியன்று மாலை விருதுகள் வழங் கப்படவுள்ளன. அதேபோல், வரலாற்று அறி ஞர் குடவாயில் பாலசுப்பிரமணியத்திற்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப் படவுள்ளது. கண்ணதாசன் பாடல்கள் சிறப்பு இசை நிகழ்ச்சி, இசை திருவிழா, சாகித்திய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ண னின் “நவீன இலக்கிய உரை”, சாலமன் பாப் பையாவின் சிறப்பு பட்டிமன்றம், கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற 3 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் சிறப்பு கூப்பன் மூலம் இலவச புத்தகங்கள் வழங்க உள்ளனர். ஜூலை 28 ஆம் தேதியன்று 5 ஆயிரம் பள்ளி மாணக்கர்கள் பங்கு பெறும் திருக்குறள் பெருந்திரள் வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இப்புத்தக திருவிழாவினை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி துவக்கி வைக்கிறார். புத்தக திரு விழா நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் செல்வதற்கு ஏதுவாக பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கொடிசியா வில் தேவையான அடிப்படை வசதிகளுக் கான முன்னேற்பாட்டு பணிகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இந்த புத்தக கண்காட் சிக்கு நுழைவு கட்டணம் ஏதுமில்லை. கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள் கண் காட்சியில் கடைபிடிக்கப்படும், என்றார்.