districts

தொழிலை முடக்கிய எஸ்.பி.வேலுமணி, வானதி சீனிவாசன்

கோவை, பிப்.16- அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், பாஜக எம்எல்ஏ- வான வானதி சீனிவாசனும் இணைந்து தனது தொழிலை முடக்கி ரூ 1.5 கோடி  நஷ்டம் ஏற்படுத்தியதோடு, கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக கோவை யைச் சேர்ந்த பாஜக பிரமுகர் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. கோவை காந்திபுரம் 100 அடி ரோடு 1  ஆவது வீதியை சேர்ந்தவர் ரவிசங்கர் (54). காடேஷ்வரா என்ற பெயரில் கேபிள் நிறுவனம் நடத்தி வருகிறார். பாஜகவில் விவசாயிகள் பிரிவு துணைச் செயலாள ராக இருந்துள்ளார்.  இவர் முதலமைச்சர் தனிப்பிரிவு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் பாஜக எம்எல்ஏ-வான வானதி சீனிவாசன் ஆகியோர் மீது புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,  நான் கோவையில் 1990ம் ஆண்டு முதல் கேபிள் தொழில் செய்து வருகிறேன்.  கடந்த 30 ஆண்டுகளாக பாஜ கட்சியில் இருந்து கொண்டு பல பொறுப்புகளையும் வகித்து  இருக்கிறேன்.

2017-ம் ஆண்டு குன்னூரை சேர்ந்த பாரூக் என்பவரிடம் சிடிஎன் கம் பெனி டிஷ்ட்ரிபியூட்டர் எடுத்து செட்டாப் பாக்சை கோவையில் உள்ள கேபிள் ஆப் ரேட்டர்களுக்கு விநியோகம் செய்து வந் தேன். பாஜகவில்  சீனியர் என்ற ஒரே கார ணத்தால் பாஜ சட்டமன்ற உறுப்பினர்  வானதி சீனிவாசன் என் மீது காழ்ப்புணர்ச்சி யில் இருந்தார். அவருக்கு நான் அடி பணியாத காரணத்தால், முன்னாள் அமைச் சர் எஸ்.பி. வேலுமணி உதவியுடன் கோவை  மாநகராட்சி நிர்வாகத்தை பயன்படுத்தி என்னை பழிவாங்க திட்டமிட்டார்.  அதன்படி  கடந்த 28.09.2017 அன்று ஜேசிபி இயந்திரம் மூலமாக 100-க்கும் மேற் பட்ட அதிகாரிகளின் முன்னிலையில், காவல் துறை உதவியுடன் கேபிள் மாபியா கும்பலு டன் சேர்ந்து சட்டத்திற்கு புறம்பாக கோவை யில் அனைத்து பகுதிகளிலும் உள்ள  எனது காடேஷ்வரா கேபிள் நிறுவனத்திற்கு சொந்தமான  ரூ.75 லட்சம் மதிப்பிலான வயர் களை துண்டு, துண்டாக வெட்டி எடுத்து சென்று விட்டனர். அப்போது பாஜ கட்சியின் மாநில தலை வராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் தலை யிட்டும் இவர்கள் செவிசாய்க்கவில்லை.

இதையடுத்து நான் சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகி கோவை மாநகராட்சி யிடம் உள்ள எனக்கு சொந்தமான வயர் உள்ளிட்ட பொருட்களை திரும்ப எனக்கு வழங்க வேண்டும் என மனுதாக்கல் செய்து,  கடந்த 11.10.2017 அதற்கான உத்தரவையும் பெற்றேன். ஆனால் மாநகராட்சி நிர்வாகம்,  நீதித்துறை உத்தரவை நடைமுறைப்படுத்த வில்லை. முன்னதாக, எனது நிறுவன வயர் களை சேதப்படுத்துவதற்காக எதிர் தரப்பு கேபிள் ஆப்ரேட்டர்களிடமிருந்து பல லட்சம்  ரூபாய் கைமாறாக வாங்கியிருக்கின்றனர். ஆகவே, மாநகராட்சி எனது நிறுவன வயர்களை துண்டிக்க செய்ய அதிகாரம் உள்ளதா? என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது மாநகராட்சிக்கு  கேபிள் சம்பந்தமாக எந்த உத்தரவும் வழங்க அதிகாரம் இல்லை என 20.09.2021 அன்று  பதில் அளித்துள்ளனர்.

மேலும் நான் கேபிள்  நடத்தும் நிறுவனம் மூலமாக மாநகராட் சிக்கு ரூ.10 ஆயிரம் டெபாசிட் கட்டியிருந் தேன். அதனையும் திருப்பி தர இயலாது  எனவும் தெரிவித்து விட்டனர். இதிலிருந்தே  மாநகராட்சி உள்நோக்கோடு செயல்பட்டி ருப்பது உறுதியாகிறது. இப்படி பல்வேறு வழிகளில் வானதி சீனி வாசனும், எஸ்.பி.வேலுமணியும் இணைந்து அதிகாரத்தை பயன்படுத்தி நியாயமாக தொழில் நடத்திக் கொண்டிருந்த எனது தொழிலை முடக்கிவிட்டனர்.  இதனால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு விட்டது. நான் கடனாளியாகி விட்டேன். எனவே, தகுந்த விசாரணை மேற் கொண்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.  வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் கேபிள் மாபியா ஆப் ரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது பொருட்களை மாநகராட்சியிடமிருந்து  மீட்டு இழப்பீடு பெற்று தர வேண்டும். மேலும், கேபிள் மாபியா கும்பல்கள் கோவை கேபிள் ஆபரேட்டர்களிடம் சுமார்  50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேபிள் லைன் களை மிரட்டி வாங்கி கொண்டனர். அதில் எனது கேபிள்களும் அடங்கும். இது தொடர் பாகவும் உரிய விசாரணை நடத்தி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவித்துள்ளார். பாஜக பிரமுகர் அளித் துள்ள இந்த புகாரானது கோவையில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.