கோவை: சக ஊழியர்களின் அலட்சியத்தால் அரவை இயந்திரத்திற்குள் சிக்கி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பையை உரமாக பிரிக்கும் எந்திரத்துக்குள் அங்கு வேலை செய்யும் கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த சத்யா (23) என்பவர் எந்திரத்துக்குள் சென்று துடைத்துக் கொண்டிருந்த போது, அவர் இருப்பதை கவனிக்காமல் சக ஊழியர்கள் எந்திரத்தின் சுவிட்ச்சை ஆன் செய்ததால் சத்யா அந்த எந்திரத்துக்குள் சிக்கிக்கொண்டார்.
அதில் அவரது இரு கால்களும் எந்திரத்துக்குள் சிக்கி சிதைந்தது. படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை தெற்கு தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக கங்கா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.