districts

img

கோவை – அவிநாசி மேம்பால பணிகள் 2024ல் நிறைவடையும்

கோவை, ஜூன் 16- கோவை – அவிநாசி மேம்பால பணிகள் 2024 ஆம் ஆண்டில் நிறைவடைந்து, மக் கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தமிழக சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு தலைவர் கோவி.செழியன் தெரிவித் துள்ளார். தமிழக சட்டமன்ற பேரவையின் 2021- 2023 ஆம் ஆண்டுக்கான மனுக்கள் குழு  கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்க ளில் ஆய்வு மேற்கொண்டனர். இக்குழு வின் தலைவரும், அரசு தலைமை கொறடா வுமான கோவி.செழியன் மற்றும் உறுப்பி னர்கள் அமுல் கந்தசாமி, கதிரவன், கிரி, கோவிந்தசாமி, சங்கர், சந்திரன், செந்தில் குமார், பிரபாகரராஜா, மதியழகன் மாங்குடி ஆகியோர், கோவை - அவிநாசி சாலை, விமான நிலைய சந்திப்பு அருகில் நெடுஞ் சாலை துறையின் சார்பில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை அமைக்கப் பட்டு வரும் மேம்பாலப்பணியினை பார்வை யிட்டனர். இதன்பின்னர் டைட்டில் பார்க் அரு கில் பி.டி.சாலை அமைக்கும் பணிகள், சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனியில் ரோப் கட்டுமான பணிகளை பார்வையிட் டனர். அதனைத்தொடர்ந்து வெள்ளலூ ரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக் கும் பணிகள்,  63 ஆவது வார்டு, ராமலிங்க ஜோதி நகரில் மழைநீர் வடிகால் புனர மைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக, இக்குழு கோவை வரு வதையொட்டி கோவை மாவட்ட எல்லைக் குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங் களோ தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச் சினைகள் குறித்த மனுக்களை தலைவர், மனுக்கள் குழு தமிழக சட்டமன்ற பேரவை, சென்னை 600009 என்ற முகவரிக்கு கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண் டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் படி சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற் குட்பட்ட மனுக்கள் ஆய்வுக்கு எடுத்து கொள் ளப்பட்டது. இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி கலையரங்கத்தில்  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழுவா னது நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதன்பின் தமிழக சட்டமன்ற பேரவை யின் மனுக்கள் குழு தலைவர் கோவி.செழி யன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமி ழக சட்டப்பேரவை மனுக்கள் குழு சார்பில் இன்றைய தினம் (வியாழனன்று) கோவை  மாவட்டத்திலும், நாளைய தினம் (வெள்ளி யன்று) நீலகிரி மாவட்டத்திலும்  மனுக்கள் மீதான விசாரணை குறித்து கள ஆய்வு  செய்யப்படும். மக்களுடைய கோரிக்கை களை நிறைவேற்றுவதற்காக நேரடி கள ஆய்வு செய்து விரைவாக நிறைவேற்று வதற்கு உறுதுணையாக இருப்போம், என் றார். மேலும், அவிநாசி மேம்பால பணிகள் 2024 ஆம் ஆண்டு நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த பாலப்பணிகளை விரைவாக முடித்து கொடுக்க வேண்டுமென தமிழக முதல்வர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆகி யோர் துரிதமாக நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். 122 மனுக்கள் கள ஆய்வுக்கு எடுத்துள்ளோம், என்றார். இந்த ஆய்வில்  மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை ஆணையாளர் ஷர்மிளா உட்பட அர சுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண் டனர்.