districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ஆள் கடத்தல் புகாரில் கைதான அதிமுக பிரமுகர்

15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

தருமபுரி, நவ.18- பென்னாகரம் அருகே கூலித் தொழிலாளிகளை கடத்தி சென்று தாக்கியதாக தருமபுரி மாவட்ட ஆவின் தலைவர் டி.ஆர்.அன்பழகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க  பென்னாகரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் பிரவினா உத்தர விட்டுள்ளார். அதிமுக விவசாய அணியின் மாநிலத் தலைவராகவும், தருமபுரி மாவட்ட ஆவின் கூட்டுறவு சங்க தலைவராக இருந்து வருபவர் டி.ஆர்.அன்பழகன். இவர் அப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளை கடத்தி சென்று தாக்குதல் நடத்தியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலாளி களின் உறவினர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், டி.ஆர்.அன்பழகன் புதனன்று கைது செய்யப்பட் டார். அப்போது, தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு விட்டதாக  அவர் கூறவே, முதலில் பென்னாகரம் அரசு மருத்துவமனை யிலும் பின்னர், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில், சிகிச்சையிலிருந்த மருத்துவமனைக்கே நேரில் வந்திருந்த பென்னாகரம் குற்றவியல் நீதிமன்ற நடு வர் பிரவினா, விசாரணை மேற்கொண்டு டி.ஆர்.அன்பழ கனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இத னைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்து வமனைக்கு ஆம்புலன்சில் அவர் காவல் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார்.

வாலிபர் சங்கத்தின் போராட்டத்திற்கு அஞ்சி  அலுவலக கதவை பூட்டிய அதிகாரிகள்

சேலம், நவ.18- வாலிபர் சங்கத்தின் நூதன போராட்டத்திற்கு அஞ்சி மாந கராட்சி மண்டல அலுவலகத்தை ஊழியர்கள் உட்பக்க மாக பூட்டிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் 40 ஆவது கோட்டம், அம்மாப்பேட்டை, பச்சப்பட்டி அசோக் நகரில் சாக்கடை கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்து  வருகிறது. ஆகவே, இப்பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை  முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் எவ்வித அசைவும் இன்றி கிடக்கும் அதிகாரிகளை பாராட்டி கேக் வழங்கும் நூதன போராட்டம் நடைபெற் றது.  அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்திற்கு முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் கேக் வெட்டி அதிகாரி களுக்கு வழங்க அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வாலிபர் சங்கத்தினர் திரண்டனர். இதையடுத்து அங் கிருந்த அதிகாரிகள் அம்மாப்பேட்டை  மண்டல அலுவல கத்தை உட்புறமாக பூட்டிக் கொண்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கேக்கை பறிக்க முயன்றதால் தள்ளு, முள்ளு ஏற்பட் டது. முன்னதாக, இப்போராட்டத்தில் வாலிபர் சங்கத்தின் சேலம் கிழக்கு மாநகர செயலாளர் பெரியசாமி, தலை வர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

உதகை, நவ.18- நீலகிரி மாவட்டம், பந்த லூர் பகுதியில் வினீஷ்(21) என்பவருக்கும், 16 வயது  சிறுமிக்கும் இடையே பழக் கம் ஏற்பட்டு நிலையில், ஆசை வார்த்தை கூறி சிறு மியை வினீஷ் கடத்தி சென்ற தாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் எரு மாடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் அவர்களை தேடி வந்தனர். அப்போது பந்த லூர் அருகே  ஒரு வீட்டில் சிறுமியுடன் வினீஷ் தங்கி இருப்பது தெரிய வந்ததை யடுத்து, உடனடியாக அங்கு சென்ற போலீசார் இருவரையும்  காவல் நிலை யத்திற்கு அழைத்து வந்த னர். பின்னர் சிறுமியை கடத்தியதாக போக்சோ சட் டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வினீஷை கைது  செய்தனர். சிறுமியை பெற் றோரிடம் ஒப்படைத்தனர்.