கால்நடை பராமரிப்புத் துறையில் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல்
தர்மபுரி, ஏப்.16- தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலி யாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்க ளுக்கான நேர்காணல் திங்கட்கிழமை (ஏப்.16) முதல் ஏப்ரல் 23 வரை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் நடை பெற உள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு திங்கட்கிழமை (ஏப்.16) முதல் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வரை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது. மேற்கண்ட பணிக்கு விண்ணப்பித்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப் பட்டுள்ள நாளில் அழைப்பாணை கடிதம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பதாரர்கள் நேர்காண லில் கலந்து கொள்ள வேண்டும். அலுவலர் அல்லது தலைமை ஆசிரியரின் நன்னடத்தை சான்று, வாகன ஓட்டுநர் உரிமம் இருப்பின் அதற்கான சான்று ஆதார் அட்டை, குடும்ப அட்டை அசல் மற்றும் நகல் ஆகிய வற்றுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். நேர் காணல் அழைப்பாணை கிடைக்கப் பெறாதவர்கள் நாளை முதல் 23 ஆம் தேதி வரை வேலை நேரங்களில் தர்மபுரி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆதாரங்களுடன் நேரில் அழைப் பாணையை பெற்றுக் கொள்ளலாம். நேர்காணல் அழைப் பாணை இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மல்பெரி செடிகளில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
உடுமலை, ஏப்.16- மல்பெரி செடிகளில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. உடுமலை சுற்றுப்பகுதியில் வெண்பட்டுக்கூடுகள் உற் பத்தியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வரு கின்றனர். இப்பகுதியில் உற்பத்தியாகும் பட்டுக்கூடுக ளுக்கு கர்நாடகா மாநிலம் உள்ளிட்ட பிற மாநில கொள்முதல் மையங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.உடு மலை பகுதியில் நிலவி வரும் சீதோஷ்ண நிலை, பட்டுக் கூடு உற்பத்திக்கு உகந்ததாகவும், நூற்புத்திறன் அதிக முள்ள கூடுகள் இப்பகுதியில் உற்பத்தியானதும் முக்கிய காரணமாகும்.பட்டுப் புழுக்களுக்கு உணவாக வழங்கப் படும் மல்பெரி இலைகளே தரமான பட்டுக்கூடுகள் உற்பத் திக்கு ஆதாரமாக உள்ளது. எனவே உடுமலை பகுதியில் மல்பெரி தோட்ட பராமரிப்புக்கு தனிக்கவனம் செலுத்தி வந்த னர். ஆகவே, சொட்டு நீர் பாசனம் உள்ளிட்ட கட்டமைப்பு வச திகளை ஏற்படுத்தி, உர மற்றும் நீர் மேலாண்மைக்கு முக்கி யத்துவம் தரப்பட்டது. மேலும் மத்திய பட்டு வாரியம், மாநில அரசின் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மல்பெரி தோட்ட பராமரிப்பு குறித்து கிராமம்தோறும் பயிற்சி வகுப்புகள் நடத் தப்பட்டது. நோய்த்தடுப்பு பணிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- தொடர் மழை, அதிக வெப்பம் உள்ளிட்ட காரணங்களால், மல்பெரி செடி களில் நோய்த்தாக்குதல் அதிகரித்து வருகிறது. தரமில்லாத இலைகளை, புழுக்களுக்கு உணவாக வழங்கினால் அவை யும் பாதிப்புக்குள்ளாகும். நீண்ட காலமாக பராமரிக்கப் படும் மல்பெரி தோட்டங்களிலும், நோய்த்தாக்குதல் கட்டுப் படுத்த முடியாமல் உள்ளது. எனவே பட்டு வளர்ச்சித்துறை சார்பில், தரமான மல்பெரி இலைகள் உற்பத்திக்கான கலந் தாய்வு கூட்டங்களை கிராமந்தோறும் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதனால் வெண்பட்டுக்கூடுகள் உற் பத்தியில் முன்னிலை என்ற நிலையை உடுமலை பகுதி தக்க வைக்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கூட்டுறவுத்துறை கருத்தரங்கம்
தருமபுரி, ஏப்.16- தருமபுரி அரசு கலை கல் லூரியில் கூட்டுறவுதுறை சார்பில் மன்ற விழா நடை பெற்றது. கூட்டுறவு துறைத் தலைவர் ராஜேந்திரன் வர வேற்றார். கல்லூரி முதல்வர் ப.கி. கிள்ளிவளவன், கூட்டுறவு என்ற தலைப்பில் கருத்து ரையாற்றினார். கூட்டுறவு துறையின் சிறப்புகள் மற் றும் வேலைவாய்ப்புகள் குறித்து கூட்டுறவுதுறை இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சந் தானம் பேசினார். முடிவில் முதுநிலை மாணவர் தென்ன ரசு நன்றி கூறினார்.
குடியிருப்பை அகற்றாமல் பட்டா வழங்கிடுக கேவிஆர் நகர் பகுதி மக்கள் மேயரிடம் மனு
திருப்பூர், ஏப்.16- திருப்பூர் 42 வது வார்டு பகுதியில் குடியிருப்பை அகற்றாமல் வகை மாற் றம் செய்து பட்டா வழங்கக்கோரி மாநக ராட்சி மேயர் ந.தினேஷ்குமாரிடம் அப் பகுதி மக்கள் மனு அளித்தனர். திருப்பூர் மாநகராட்சி 42ஆவது வார்டுக்கு உட்பட்ட கே.வி.ஆர் நகர், ஜீவா நகர் பகுதி பொது மக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் திருப்பூர் மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் சனியன்று அதிமுக மாமன்ற உறுப்பி னர் அன்பகம் திருப்பதி தலைமையில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனு வில், நாங்கள் கடந்த 35 வருடங்க ளாக ஜீவா நகர், கே.வி.ஆர்.நகர், அண்ணா நகர், முத்துமாரியம்மன் கோவில் வீதி பகுதியில் 450-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கிறோம். எங்கள் வீடுகளுக்கு வழங்கப் பட்ட குடிநீர் இணைப்புகளுக்கு உண் டான வரியையும், மின் இணைப்புக ளுக்கு உண்டான மின் கட்டணத் தொகை மற்றும் வைப்பீடுத் தொகை யையும் தவறாமல் செலுத்தி வருகி றோம். கடந்த 30 ஆண்டுகளாக எந்த வித மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்படவில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு திருப்பூர் மாநகரம் வெள்ளத்தால் சூழ்ந்த போதும் எங்கள் பகுதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நாங்கள் எவ்வகையிலும் அரசிடமிருந்து நிவா ரணம் பெறவில்லை. எங்கள் பகுதிக்கு வரும் வாய்க்கால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் முன்பே துண்டிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறமுள்ள ஓடையில் கலந்து சென்று விடுகிறது. ஆகவே எங்கள் பகுதி எந்தவிதமான மழையாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட கூடிய வாய்ப்பு இல்லை. இதை நாங்கள் அரசிடம் வலியு றுத்தி எங்கள் பகுதியை வகை மாற்றம் செய்து தர ஏற்பாடு செய்யக் கோரி அந்தப் பணியும் நடந்து கொண்டிருந் தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட் டுள்ளதால் அந்த பணியை தொடர்ந்து செய்து எங்கள் பகுதியை வகை மாற் றம் செய்து எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் அங்கேயே தொடர்ந்து வசிக்க ஆவண செய்து தர வேண்டும். மேலும் அங்கு நோட் டீஸ் வழங்குவதற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மக்களிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், பொது மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்து வதற்கு பணிகளை செய்வதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேயரிடம் பொது மக்கள் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து அவர்களிடம் பேசிய மேயர் தினேஷ் குமார், சட்டப்படியான வாய்ப்புகளைப் பொறுத்து உரிய நட வடிக்கை எடுப்பதாக கூறினார்.
திருப்பூர்: கடனுதவி சிறப்பு முகாம்கள்
திருப்பூர், ஏப்.16- திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ மற்றும் மகளிர் திட்டம் அலுவலகம் மூலம் மாவட் டத்திலுள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் குறிப்பிட்ட தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடனுதவி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் கடன் திட்டங்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், மானியத்துடன் கூடிய சிறு, குறு தொழிற் கடன்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான அரசின் கடனுதவி திட்டங்கள், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் கல் விக் கடன், பயிர்க்கடன், நில மேம்பாட்டுக் கடன், உணவு பதப் படுத்துதல் குறித்த விபரங்கள், ஆலோசனைகள் வழங்கப் பட உள்ளது. மேலும் முகாமில் பெறக்கூடிய கடன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து வங்கி விதிமுறைகளின்படி உரியவர்க ளுக்கு கடன் அனுமதி கடிதம் வழங்குவதற்காக அரசு மற்றும் வங்கித் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி உடுமலைப்பேட்டை, 27 ஆம் தேதி குண்டடம், 28-ஆம் தேதி அவிநாசி, 29 ஆம் தேதி வெள்ளகோவில், 30 ஆம் தேதி தாரா புரம், மே 4 ஆம் தேதி ஊத்துக்குளி, 5 ஆம் தேதி பல்லடம், 6 ஆம் தேதி திருப்பூர், 7 ஆம் தேதி குடிமங்கலம், 10 ஆம் தேதி மடத்துக்குளம், 11 ஆம் தேதி பொங்கலூர், 12 ஆம் தேதி மூலனூர் மற்றும் 13 ஆம் தேதி காங்கேயம் ஆகிய இடங்க ளில் நடைபெற உள்ளது.
ரயில் மோதி 2 புள்ளி மான்கள் பலி
அவிநாசி, ஏப்.16- அவிநாசி சுற்றுவட்டா ரத்தில் உள்ள வனப் பகுதிக ளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. இவை உணவுக்காகவும், குடிநீருக்காகவும் வனப் பகு தியை விட்டு வெளியேறும் போது, வாகனங்களில் அடி பட்டும், நாய்களிடம் சிக்கி யும் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் வெள்ளி யன்று இரவு அவிநாசி செம் மாண்டம்பாளையம் ரயில் தண்டவாளத்தை இரு மான் கள் கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ரயில், மான்கள் மீது மோதியது. இதில், இரு மான்களும் சம் பவ இடத்திலேயே உயிரி ழந்தன. தகவலறிந்து சம்ப வயிடத்திற்கு சென்ற வனத் துறையினர் மான்களின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
கொடுமுடி காவிரி ஆற்றில் பாறைக்கு வைத்த வெடியில் சிக்கி தொழிலாளி பலி
ஈரோடு, ஏப்.16- கொடுமுடி காவிரி ஆற்றில் சனியன்று காலை பாறைக்கு வைத்த வெடியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம் பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி மன்னதம்பாளையம் காவிரி ஆற்றில் ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கூட்டு குடி நீர் திட்ட பணிகள் தனியார் நிறுவனத்தால் ஒப்பந்த அடிப்படை யில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு சேலம் மாவட்டம், மேட்டூர் குஞ்சாண்டியூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஒப் பந்த அடிப்படையில் பாறைகளை வெடி வைத்து தகர்த்து குழி தோண்டும் பணி மேற்கொண்டு வருகிறார். அவரிடம் மேட்டூர் பெரியசோரகையை சேர்ந்த அருள் என்பவரது மகன் குமார் (35), மாதையன் என்பவரது மகன் ரவி (26), ஆகியோர் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், சனியன்று காலை 8.30 மணி அளவில் குமார், ரவி ஆகியோர் வழக்கம்போல் காவிரி ஆற்றில் கம்ப்ர ஷர் வாகனங்கள் மூலம் பாறைகளில் குழி தோண்டும் பணி யில் ஈடுபட்டனர். அப்போது ஏற்கனவே பாறையில் பழைய குழியில் வைக்கப்பட்டிருந்த வெடிக்காத வெடி ஒன்று திடீ ரென்று வெடித்தது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டி ருந்த குமாரின் முகம் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் ரவி பலத்த காயம் அடைந்தார். இதுபற்றி அறிந்த மலையம்பாளையம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த ரவியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெடி விபத்தில் பலியான குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பர பரப்பான சூழ்நிலை நிலவியது.
போதைக்கு அடிமையாகும் கல்லூரி மாணவர்கள்
தீவிர கண்காணிப்பில் தனிப்படை
கோவை, ஏப்.16- கோவையில் போதைக்கு அடிமையாகி குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்க தனிப்படைகள் அமைக்கப்பட் டுள்ளதாக மாநகர துணை ஆணையர் உமா தெரிவித்துள்ளார். கோவை மாநகரில் ஏராளமான கல்லூரி கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரி களில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட் டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்லூரி அருகே தனியாக அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த மாணவ-மாணவிகளிடையே போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் செயின் பறிப்பு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தடுக்க மாநகர போலீஸ் சார்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாநகர காவல் துணை கமிஷனர் உமா கூறியதாவது:கோவை மாநக ரில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்லூரிகளில் விடுதி கிடைக் காத மாணவர்கள் வெளியே வீடுகள் வாட கைக்கு எடுத்து தங்கி படித்து வருகின்ற னர். இந்த மாணவர்கள் மத்தியில் தற்போது போதை கலாச்சார பழக்கங்கள் அதிகரித்துள் ளது. போதைக்கு அடிமையாகும் மாணவர் கள் செலவுக்காகவும் மற்றும் ஆடம்பர செலவு செய்வதற்காகவும் செயின் பறிப்பு மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற் பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வெளியே தங்கி படிக்கும் மாணவர்கள் பெற் றோர்களின் கண்காணிப்பு இல்லாமல் இருப்ப தால், போதைக்கு அடிமையாகி குற்ற சம்ப வங்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. எனவே இதனை தடுக்க மாநகரில் அந் தந்த காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாக போலீசார் நியமிக்கப்பட் டுள்ளனர். அவர்கள் கல்லூரிகளுக்கு சென்று எத்தனை மாணவர்கள் வெளியே தங்கி படிக்கிறார்கள் என்ற பட்டியலை சேகரித்து வருகின்றனர். மேலும், மாணவர்கள் அறையெடுத்து தங்கியுள்ள வீட்டு உரிமையா ளர்களிடம் எத்தனை மாணவர்கள் தங்கி யுள்ளார்கள்? அவர்கள் எந்தெந்த பகு திகளை சேர்ந்தவர்கள்? எங்கே படிக்கிறார் கள்? போன்ற தகவல்களை சேகரித்து வரு கின்றனர். இதன்மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை தடுக்க முடியும். மேலும், போதை பழக்கத்திற்கு அடிமை யாகும் மாணவர்களை கண்காணித்து அந்த பழக்கத்தில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கமுடியும். இவ்வாறு அவர் கூறினார்.
கடத்தல் கும்பல் கைது – இருவர் மீட்பு
கோவை, ஏப்.16- பெங்களூரில் இருந்து வியாபார ரீதியாக கோவை வந்தவர்களை கடத் திய கும்பலை போலீசார் கைது செய்து, இருவரை மீட்டனர். கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே உள்ள ஹோலி கிராசை சேர்ந்த வர் முகமது செய்யது பாஷா (38). இவர் கோவை கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்தார். இதில், “நான் எலக்ட்ரிக்கல் ஸ்கிராப் வியாபாரம் செய்து வருகிறேன். பெங்களூரை சேர்ந்த பசீர் அகமது என் பவருடன் தொழில்ரீதியான பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் எங்கள் இரு வருக்கும் இடையே தொழில் ரீதியான முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி பொருட்கள் வாங்குவதற்காக எனது மகனுடன் காரில் கோவை வந்தேன். பின்னர் பொருட்கள் கிடைக்க தாமதமா னதால் காரில் உதகை நோக்கிச் சென் றேம். கார் கீரணத்தம் அருகே சென்ற கொண்டிருந்தபோது ஒரு கும்பல் காரை வழிமறித்து நிறுத்தியது. பின்னர் காரில் இருந்து இறங்கி வந்த 4 பேர் கத்தி மற்றும் அரிவாளைக் காட்டி நான், எனது மகன் முகம்மது சைப்(14) மற்றும் உறவினர் முகமது யாசின் ஆகியோரை மிரட்டி காரில் கடத்தி சென்றனர். பின்னர் என்னை மட்டும் சூலூர் அருகே இறக்கிவிட்டு விட்டு ரூ.4.75 லட்சம் பணத்துடன், எனது மகன் மற்றும் உறவினரை கடத்தி சென்றுவிட்டனர். அவர்களைக் கண்டுபிடித்துத் தரவேண் டும். என தனது புகார் மனுவில் தெரிவித் திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீ சார் தனிப்படை அமைத்து கடத்தியவர் களை தேடி வந்தனர். இந்த நிலையில் கோவில்பாளையம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், அத்திப் பாளையம் பகுதியில் வாகன சோதனை யில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப் போது அந்த வழியாக கர்நாடக பதி வெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட முகமது சைப், முகமது யாசின் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர் களை மீட்டனர். பின்னர் காரில் அவர் களை கடத்தி வந்த பெங்களூரை சேர்ந்த ஹபீப் அகமது(34), சையது அஸ்ரர்(32), சுபேர் அகமது(27), முகமது மொசின்(25) ஆகியோரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களின் காரை பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்கான கார ணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புகார் அளித்த 36 மணி நேரத்தில் கடத்தப்பட்டவர்களை மீட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீ சாரை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்.
தருமபுரி: வள்ளல் அதியமான் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
தருமபுரி, ஏப்.16- தருமபுரியில் வள்ளல் அதியமான் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட் டுப்பாட்டில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில், கடை யேழு வள்ளல்களில் ஒருவரான அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த வள்ளல் அதியமானின் பிறந்த நாள் அரசு விழா வாக நடைபெற்றது. இவ்விழாவில் தருமபுரி மாவட்ட வரு வாய் அலுவலர் சு.அனிதா கலந்து கொண்டு வள்ளல் அதியமான் திருவுருவ சிலைக்கும், அவ்வையார் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி னார். அதனைத்தொடந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பாலக் கோடு கே.பி.அன்பழகன், பென்னாகரம் கோ.க.மணி, பாப்பிரெட்டிப்பட்டி ஆ.கோவிந்தசாமி, அரூர் வே.சம்பத் குமார், தருமபுரி எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தடங்கம்.பெ.சுப்பிரமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.அண்ணாதுரை ஆகியோர் வள்ளல் அதியமான் மற்றும் அவ்வையார் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இண்டூரில் 10 கிலோ குட்கா பறிமுதல்
தருமபுரி, ஏப்.16- தருமபுரி மாவட்டம், நல் லம்பள்ளி வட்டம், இண்டூரை சேர்ந்தவர் அப்துல் ஆசிப் (35). மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடை யில் தடை செய்ய குட்கா போதை பொருள் விற்பனை செய்வதாக இண்டூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறையினர் கடை மற்றும் குடோனில் சோதனை செய்தனர். இதில் சுமார் 10 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டி ருந்தது கண்டுபிடிக்கப்பட் டது. இதனை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து அப் துல்ஆசிப்பை காவல்துறை யினர் கைது செய்தனர்.