கோவை, டிச.3- உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பசுமை கோவையை உருவாக்குவோம் என்கிற விழிப்புணர்வு பேரணியை மாற்றுத்திறனாளிகள் மேற்கொண்டனர். உலக மாற்றுத் திறனாளி தினத்தையொட்டி கோவை மாவட்ட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் சார்பில் பசுமையான கோவையை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தும் வகையில் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மூன்று சக்கர வாகனங்களில் பேரணி மேற்கொண்டனர். சிவானந்தா காலனி பகுதியில் இருந்து 100 அடி சாலை வரை இந்த பேரணி நடைபெற்றது. இந்த பேர ணியை மாநகர காவல் துணை ஆணையாளர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.