districts

img

சட்ட உரிமைகள் கோரி தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் பேரணி

உடுமலை, ஜன. 27 - தேங்காய்க் களத்தில் வேலை செய் யும் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட சட்ட உரிமைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உடு மலையில் தேங்காய் உரிக்கும் தொழி லாளர்கள் பேரணியாகச் சென்று கோட் டாட்சியரிடம் மனு அளித்தனர். தேங்காய் உரிக்கும் தொழிலா ளர்களுக்கு வேலை செய்யும் இடத்தில்  குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி களை ஏற்படுத்த வேண்டும். தேங்காய்  களங்களில் வேலை செய்யும் அனைவ ருக்கும் இஎஸ்ஐ உள்ளிட்ட சட்ட சலுகை களை வழங்க தொழிலாளர் நலத்துறை  நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னை தொழிலை பாதுகாக் கும் வகையில், தேங்காய் எண்ணெய் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய  வேண்டும். தேங்காய் உரிக்கும் தொழி லில் வெளி மாநில தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு பயன்படுத்தும் நபர் களின் மீது சட்டப்படி நடவடிக்கை  எடுக்க வேண்டும். இப்பகுதியில் அதிகப் படியான வேலை வாய்பை தரும்  தென்னை தொழிலைப் பாதுகாக்க தமி ழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி புதனன்று, சிஐடியு பொது தொழி லாளர் சங்கத்தின் சார்பில் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் பேரணி யில் ஈடுபட்டனர். உடுமலை மத்திய போருந்து நிலை யம் முன்பிருந்து துவங்கிய பேரணி  வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத் தில் நிறைவுற்றது. இப்பேரணிக்கு பொது தொழிலாளர் சங்க உடுமலை  செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட தலைவர் சி. மூர்த்தி, மாவட்ட செயலாளர் கே.ரங்க ராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.பஞ்சலிங்கம், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் விஸ் வநாதன், சிஐடியு நிர்வாகிகள் ரங்கநா தன், ஜோசப், கனகராஜ் தேங்காய் உரிக் கும் தொழிலாளர் சங்கத்தின் ஒருங்கி ணைப்புக்குழு உறுப்பினர்கள் தர்மன்,  ஜெயக்குமார், மகுடீஸ்வரன் மற்றும்  சிஐடியு நிர்வாகிகள் பாபு, துரையரசன்,  அஜிக் அலி, சாதிக் அலி உள்ளிட்ட திர ளான தொழிலாளர்கள் கலந்து கொண் டனர். இதைத்தொடர்ந்து வருவாய் கோட் டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.