பொள்ளாச்சி, ஜூன் 13- தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோ கிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி உறுதி அளித்துள் ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள சமத்தூர் ராம அய்யங்கார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலை இல்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு, பொள்ளாச்சி நகர்மன் றத் தலைவர் சியாமளா நவநீதகிருஷ் ணன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ் ணன் முன்னிலை வகித்தார். இதில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பி னர் கே. ஈஸ்வரசாமி கலந்து கொண்டு 41 மாணவர்களுக்கு இலவச சைக் கிள்களை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து கே. ஈஸ்வர சாமி எம்.பி., பேசுகையில், அரசு பள்ளி களின் தரம், மாணவர்களின் கல்வித் தரம் உயர வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வருகிறது. இது எல்லாம், அரசு பள்ளி மாணவர்கள் கல்வித் தரத்தில் உயர்ந்து சாதனை படைக்க வேண்டும் என்பதற்காகத் தான். நமது தமிழக முதல்வர் வெளி நாடுகளும் பார்த்து வியக்கும் வண் ணத்தில் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். இதில், காலை சிற் றுண்டி வழங்கும் திட்டம் முக்கிய மானது.
சென்னையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலை பொள்ளாச்சி வரை நீடிக்க ஒன் றிய அரசிடம் வலியுறுத்துவேன். தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதி யின் படி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்று தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 14 மாவட் டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. நகரச் செய லாளர் நவநீதகிருஷ்ணன், துணைச் செயலாளர் தர்மராஜ், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள் மு.க. முத்து, ஜெயக்குமார், நகர்மன்றத் துணைத்தலைவர் கௌதம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.