உதகை, ஜன.12- கொரோனா பரவலை கட்டுப் படுத்தும் நோக்கில், உதகை தாவர வியல் பூங்காவில் சுற்றுலா பய ணிகள் கூடாத வகையில் அனைத்து புல் மைதானங்களும் மூடப்பட் டன. கொரோனாவின் இரண்டா வது அலை சற்று குறைந்ததைய டுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நீலகிரி மாவட்டத் தில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, படகு இல்லம் உட்பட அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டன. மேலும், சுற்றுலா பயணிகள் வருவதற்கும் அனும திக்கப்பட்டது. கடந்த ஆறு மாத மாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண் ணிக்கை அதிகமாக காணப்பட் டது. குறிப்பாக, கடந்த இரு மாதங் களாக உதகை வரும் சுற்றுலா பய ணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இதனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டு வந்த நீலகிரி மாவட்ட வியாபாரி கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், நாடு முழுவ தும் தற்போது கொரோனா பர வல் அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை நாள்தோறும் அதிகரித் துக் கொண்டே வருகிறது. நீல கிரி மாவட்டத்திலும் பாதிக்கப்பட் டவர்களின் எண்ணிக்கை அதிக ரித்துக் கொண்டே செல்வதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளன. உதகையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் நேரம் குறைக்கப்பட்டது. தற் போது காலை 10 மணி முதல் பிற் பகல் 3 மணி வரை மட்டுமே சுற் றுலா பயணிகள் செல்ல அனு மதிக்கப்படுகின்றனர். எனினும், உதகைக்கு வரும் சுற்றுலா பயணி கள் கூட்டம் அதிகமாக இருப்ப தால், தொற்று பரவாமல் தடுக்க தற்போது பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம் உட்பட அனைத்து புல் மைதானங்களும் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தற்போது பூங்காவிற் குள் சுற்றுலா பயணிகள் வரும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், புல் மைதானங்களுக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல அனு மதிக்கப்பட்டால், அனைவரும் கூட்டம் கூட்டமாக அமருவதற் கும், வலம் வருவதற்கும் வாய்ப் புள்ளது. இதனால், தொற்று பர வும் சூழல் ஏற்படும். எனவே, இதனை கட்டுப்படுத்தும் நோக் கில் அனைத்து புல் மைதானங்க ளுக்குள்ளும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவு றுத்தியது. இதனைத்தொடர்ந்து, தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போது அனைத்து புல் மைதானங்களும் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, என்றனர். பூங்கா ஊழியர்களுக்கு கொரோனா இந்நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பணிபுரி யும் 150 தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. அதில், 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து பூங்கா முழு வதும் நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.