அவிநாசி, ஜன.24- திருமுருகன்பூண்டி நகராட்சி யில் தூய்மைப்பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது ரத்து செய்ய தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், புதனன்று நடை பெற்ற கூட்டத்தில் மீண்டும் தொடர் வது குறித்து மன்ற பொருளில் வைக் கப்பட்டது. இதற்கு சிபிஎம் கவுன்சி லர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டி நகராட்சியில், தூய்மைப்பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, குப்பை, சாக் கடை கால்வாய் உள்ளிட்ட பிரச்சனை கள் நகர மன்ற உறுப்பினர்களால் தீர்க்க முடியாத சூழல் உருவாகியது. இதையடுத்து, நகர் மன்ற உறுப்பி னர்கள் தூய்மைப் பணி தனியார் மயமாக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி நகர் மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனுஅளித்தனர். இதை யடுத்து அக்.31ஆம் தேதி நடை பெற்ற திருமுருகன்பூண்டி நகர மன்ற கூட்டத்தில் அனைத்து நகர் மன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு தூய் மைப் பணி தனியார் மயமாக்கப்பட் டது ரத்து செய்யும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்நிலையில் திரு முருகன்பூண்டி நகர் மன்ற கூட்டம் புதனன்று நடைபெற்றது. முன்பு ரத்து செய்யும் தீர்மானம் தற்பொ ழுது மீண்டும் தொடர்வது குறித்து மன்ற பொருளில் வைக்கப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியைச் சேர்ந்த சுப்பிரமணியம், தேவ ராஜன், பார்வதி ஆகியோர் கடும் எதிர்ப்பை பதிவு செய்துபதிவேட்டில் எங்களுடைய கருத்தையும் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி யுள்ளனர்.