districts

img

செம்மொழி பூங்காப் பணிகள்:அமைச்சர்கள் ஆய்வு

கோவை, ஆக. 5- கோவை காந்திபுரம் மத்திய சிறைச் சாலை மைதானத்தில் நடைபெற்ற வரும் செம்மொழி பூங்கா கட்டுமானப் பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி ஆகியோர் திங்க ளன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர் களை சந்தித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ரூ. 168 கோடி ரூபாய் மதிப் பீட்டில் இந்த செம்மொழி பூங்காப் பணி கள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் பணிகள் முடிவடைந்து திறக்க வேண்டும் என்பதற்காக ஆய்வுகளை மேற்கொண்டோம். நகராட்சி, மாநக ராட்சிகளில் உள்ள காலிப் பணியி டங்களை நிரப்புவதற்காக அண்ணா பல் கலைக் கழக வளாகத்தில் 2500 பேருக்கு தேர்வு நடத்த உள்ளோம். இதில், 85 சதவீத பேருக்கு தேர்வு முறையும் 15 சதவீதம் பேருக்கு நேர்காணல் முறை யில் ஆட்களை எடுக்க உள்ளோம். விரைவில் பொறியாளர்கள், உதவியா ளர்கள் எடுக்கப்படுவர் என்றார் இதனையடுத்து, கோவை மாநக ராட்சியில் 330 தீர்மானங்கள் நிறை வேறியது குறித்தசெய்தியாளர்க ளின் கேள்விக்கு பதிலளித்த நேரு, இத்தகைய தீர்மானங்கள் போடு வது, செயல்படுத்துவதற்கு தான். தீர்மானங்களை ஆராய்ந்து பொதுமக்க ளுக்கு தேவையானதை முன்னுரிமை கொடுத்து அனைத்தையும் நிறைவேற் றுவோம் என்றார். முன்னதாக நடைபெற்ற ஆய்வின் போது கோவை மாநகராட்சி ஆணை யர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.