districts

img

அரசு உதவி பெரும் பள்ளி தொடர்ந்து செயல்பட நகர்மன்றத் தலைவர் கோரிக்கை

நாமக்கல், அக்.1- குமாரபாளையம் நகராட்சியில் அரசு உதவி பெரும் பள்ளி மூடப்படுவதாக எழுந்த பிரச்சனையை அடுத்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து இப்பள்ளி தொடர்ந்து செயல்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய  வேண்டும் என நகர் மன்றத் தலைவர், மாவட்ட ஆட்சியரி டம் கோரிக்கை விடுத்துள்ளார்.  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சிக் குட்பட்ட பகுதியில் அரசு உதவி பெறும்  மகளிர் மேல்நிலைப்  பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவி கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி நிர்வாகம் சார்பில்  வருகிற 2025 மே. 31 முதல் பள்ளி மூடப்படும் என தகவல்  பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளியில்  பயிலும் மாணவிகள் மற்றும் பெற்றோர் மிகுந்த அதிர்ச்சி  அடைந்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல்  போராட்டத்தில் திங்களன்று ஈடுபட்டனர். இதனையடுத்து, அரசு அதிகாரிகள் மற்றும் குமாரபாளையம் நகர் மன்றத் தலை வர் விஜய் கண்ணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சாலை மறியல் போராட்டத்தை கைவிடச் செய்தனர்.  இந்நிலையில், செவ்வாயன்று நாமக்கல்லில் நடை பெற்ற ஊரக மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மாவட்ட  வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத் தில், பங்கேற்ற குமாரபாளையம் நகர் மன்றத் தலைவர் விஜய்  கண்ணன் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியை  மூடும் பட்சத்தில் மாணவிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ள வர்கள். எனவே மேற்கண்ட பள்ளியை தொடர்ந்து செயல் படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அதி காரிகளிடம் கோரிக்கை மனு வழங்கினார்.