ஈரோடு, செப்.1- மோட்டார் வாகன தொழிலாளர்க ளின் வாழ்வாதாரத்தை அழிக்கும், மோட்டார் வாகன சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டுமென சிஐடியு வலியுறுத்தியுள்ளது. சாலைப் போக்குவரத்து தொழிலா ளர் சங்கத்தின் (சிஐடியு) ஈரோடு மாவட்ட 10 ஆவது மாநாடு, சூரம்பட்டி வலசில் ஞாயிறன்று, சங்கத்தின் மாவட் டத் தலைவர் எஸ்.தனபால் தலைமை யில் நடைபெற்றது. துணைத்தலைவர் வி.சதாசிவம் வரவேற்றார். சிஐடியு மாவட்டச் செய்லாளர் எச்.ஸ்ரீராம் துவக் கவுரையாற்றினார். மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர். இம்மாநாட்டில், ஒன்றிய அரசின் 2019 மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும். விபத்தைக் காரணம் காட்டி கொலை குற்றவாளிகளாக சித்தரிக்கும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும். சுங்கக்கட்டண உயர்வை கைவிட வேண்டும். காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும். ஓட்டு நர்களுக்குத் தெரியாமல் அபராதம் விதிக்கும் ஆன்லைன் முறையைக் கைவிட வேண்டும். ஆட்டோ, டெம்போ, டாக்ஸி, வேன், மினி லாரி ஸ்டேண்டு களுக்கு மாவட்ட நிர்வாகம் அங்கீகாரம் அளித்து குடிநீர், மின்சார வசதி செய்து கொடுக்க வேண்டும். கார் ஷோரூம் பணியாளர்கள், பள்ளி கல்லூரி ஓட்டு நர்களுக்கு தீபாவளி போனஸ் முன்ன தாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் வி.குப்புசாமி நிறைவுரை யாற்றினார். இதைத்தொடர்ந்து சங்கத் தின் ஈரோடு மாவட்டத் தலைவராக எஸ். தனபால், செயலாளராக பி.கனகராஜ், பொருளாளராக ரவி உள்ளிட்ட 15 நிர் வாகிகளும், 25 பேர் நிர்வாகக்குழு விற்கும் தேர்வு செய்யப்பட்டனர். இறுதி யாக சி.முனிராஜ் நன்றி கூறினார்.